செய்திகள் :

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

post image

கர்நாடகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியர்களைக் கட்டுப்போட்டு கொள்ளையர்கள் பணம், நகையைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்துள்ளது. நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் முகமூடி அணிந்த மூன்று பேர் வங்கிக்குள் நுழைந்தனர். அங்குள்ள ஊழியர்களைக் கட்டிப்போட்டு ரூ. 20 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

வங்கி அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, மொத்தம் ரூ. 21 கோடிக்கு மேல் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

ஒரு கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் சுமார் 20 கிலோ எடையுள்ள தங்க நகைகளுடன் அவர்கள் தப்பிச் சென்றதாக முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 கிலோ தங்க நகையின் மதிப்பு சுமார் ரூ. 20 கோடியாகும்.

வங்கி மேலாளரின் புகாரின் அடிப்படையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர், மேலும் சந்தேக நபர்களைப் பிடிக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் விஜய்புரா காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மன் நிம்பர்கி, சந்தேக நபர்கள் போலி எண் தகடு கொண்ட சுசுகி மின் வாகனத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சியின்படி மர்ம கும்பல் மகாராஷ்டிரத்தில் உள்ள உள்ள பந்தர்பூர் நோக்கிச் சென்றுள்ளனர்.

மேலும், விசாரணை நடந்து வருகிறது. சந்தேக நபர்களைப் பிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Three masked men armed with country-made pistols and knives allegedly robbed a nationalised bank in this district, making off with over Rs 20 crore in cash and gold ornaments, after tying up the staff, police said on Wednesday.

இதையும் படிக்க:தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

கோவா மாநிலம் கனகோனாவைச் சேர்ந்த 59 வயது முதியவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் ரூ. 80 லட்சம் பணத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடியால் பலரும் பாதிக்கப்பட்டு தங்கள் பணத்தை இழந்து வ... மேலும் பார்க்க

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

டிஜிட்டல் அரெஸ்ட் எனும் இணையவழி மோசடியால் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடி தற்ப... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டதாகக் கூறியதைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்துள்ளார். மத்திய அரசு ஏற்பாடு செய்த ஹ... மேலும் பார்க்க

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜம்முவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முக்கியமான நெடுஞ்ச... மேலும் பார்க்க

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

மனிதர்களை இரண்டாவது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் விதமாக, ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தெர... மேலும் பார்க்க

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் அறிவித்துள்ளனர்.இந்தியாவும் கனடாவும் மீண்டும் தூதரக ரீதியிலான உறவுகளை மேம்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் ... மேலும் பார்க்க