செய்திகள் :

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

post image

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்தியாவும் கனடாவும் மீண்டும் தூதரக ரீதியிலான உறவுகளை மேம்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காலிஸ்தான் ஆதரவு ’சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சீக்கியர்களுக்கான நீதி அமைப்பினர் வெளியிட்ட அறிவிப்பில், இந்திய தூதரகங்கள் காலிஸ்தானிகளை குறிவைத்து உளவு அமைப்பாக செயல்படுவதாகவும் கண்காணிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடாவின் வான்கூவர் இந்திய தூதரகத்தை வியாழக்கிழமை (செப். 18) முற்றுகையிடப் போவதாகவும், அன்று தூதரகத்துக்கு வருகை தர திட்டமிட்டிருக்கும் மக்கள், வேறு தேதியை தேர்வு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 18 அன்று ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

ஆனால், தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், இந்திய தூதரகங்கள் காலிஸ்தானியர்களை குறிவைத்து உளவு அமைப்பாக நடத்தி வருகின்றன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அல்லது வான்கூவர் இந்திய தூதரகம் தரப்பில் எவ்வித கருத்தும் பகிரப்படவில்லை.

Pro-Khalistan groups have announced that they will besiege the Indian embassy in Canada.

இதையும் படிக்க : சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

கோவா மாநிலம் கனகோனாவைச் சேர்ந்த 59 வயது முதியவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் ரூ. 80 லட்சம் பணத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடியால் பலரும் பாதிக்கப்பட்டு தங்கள் பணத்தை இழந்து வ... மேலும் பார்க்க

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

டிஜிட்டல் அரெஸ்ட் எனும் இணையவழி மோசடியால் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடி தற்ப... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டதாகக் கூறியதைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்துள்ளார். மத்திய அரசு ஏற்பாடு செய்த ஹ... மேலும் பார்க்க

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜம்முவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முக்கியமான நெடுஞ்ச... மேலும் பார்க்க

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

மனிதர்களை இரண்டாவது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் விதமாக, ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தெர... மேலும் பார்க்க

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கர்நாடகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியர்களைக் கட்டுப்போட்டு கொள்ளையர்கள் பணம், நகையைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃ... மேலும் பார்க்க