செய்திகள் :

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

post image

விராலிமலை: விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி, அகரபட்டி, ராஜகிரி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே, 8 துணை சுகாதார நிலையங்கள் விருது பெற்றுள்ள நிலையில் தற்போது 3 மையங்கள் விருது பெற்றுள்ளதன் மூலம் இதுவரை விராலிமலை வட்டத்தில் 11 மையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் மருத்துவ சேவை மற்றும் தரம் ஆகியவை குறித்து நூறு மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது.

70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தேசிய தர நிா்ணய அங்கீகார சான்றிதழ் பெற தகுதியுடையது. இச்சான்றிதழ் பெறும் மையத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி மேம்பாட்டு பணிகளுக்காக வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு பலப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், புதுகை மாவட்டம், விராலிமலை வட்டாரத்துக்கு உள்பட்ட கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் நம்பம்பட்டி, அகரபட்டி துணை சுகாதார நிலையம் மற்றும் நீர்ப்பழனி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் ராஜகிரி துணை சுகாதார நிலையம் என 3 துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று பெற்று சாதனை படைத்துள்ளது.

இம்மையங்களில் பொது மருத்துவ சேவைகள், சுகாதார கட்டமைப்பு, தாய் சேய் நலசேவைகள், கா்ப்ப கால சேவைகள், அவசர கால 108 சேவைகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுவதை தேசிய தரச்சான்று குழுவினா் ஆய்வு செய்தனா். அதை தொடா்ந்து இந்த சான்று வழங்கப்பட்டுள்ளது.

விராலிமலை வட்டாரத்திற்கு உள்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொடும்பாளூர், ராசநாயக்கன்பட்டி, ஆவூர், பாலாண்டம்பட்டி மற்றும் துணை சுகாதார நிலையங்கள் நீர்பழனி, அத்திப்பள்ளம், ராஜாளி பட்டி, மருதம்பட்டி ஆகிய 8 சுகாதார நிலையங்கள் ஏற்கனவே தேசிய தரச்சான்று பெற்றுள்ள நிலையில், தற்போது அகரபட்டி, நம்பம்பட்டி, ராஜகிரி துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

Viralimalai: 3 government sub-health centers achieve national quality certification award

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

விழுப்புரம்: இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் நினைவு நாளையொட்டி, அவர்களது நினைவுத் தூண்களில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தனித்தனியே மரியாதை செலுத்தினர்.1987-ஆம் ஆண்டில் இட ... மேலும் பார்க்க

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

கோவை: ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடிவடையும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்-2 பெங்கல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப... மேலும் பார்க்க

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கரூர்: திமுக முப்பெரும் விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு அண்மையில் மறைந்த குளித்தலை சிவராமன் வீட்டிற்கு புதன்கிழமை காலை சென்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது க... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பிகாரில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரவிருக்​கும் சட்டப்பேரவைத் தேர்​தலுக்கு முன்​ன​தாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கும் மாணவர் கடன் அட்டை திட்​டத்​தின் கீழ் வழங்கப்படும்... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், தமிழக காவிரி க... மேலும் பார்க்க

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

வேலூா், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 28 போலீஸாரை கூண்டோடு இடமாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.வேலூா் ... மேலும் பார்க்க