செய்திகள் :

``2026 தேர்தலுக்கு பிறகு பழனிசாமி நடுரோட்டில் நிற்கப்போகிறார்'' - டிடிவி தினகரன் காட்டம்

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். 

அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.

அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் இன்று (செப்.17) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடியை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

"உள்துறை அமைச்சரைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

இதுவரை அரசியலில் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எந்த ஒரு கட்சித் தலைவராவது கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துவிட்டு வரும்போது இப்படி முகத்தை மூடிக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறீர்களா?

அருகில் அமர்ந்திருந்தது அவரது அன்பு மகன் என்று ஊடகங்களைப் பார்க்கும்போதுதான் தெரிந்தது. முகத்தை மூடிக்கொண்டு வந்ததற்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். இனி அவரை முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

நல்ல வேலை முகமூடிக்கொள்ளையன் மாதிரி வரவில்லை. பழனிசாமி அடிக்கின்ற கூத்தையெல்லாம் ராஜதந்திரம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவருடைய குணாதிசயம் இதுதான். தமிழ்நாட்டு மக்கள் இவரிடம் இனி ஏமாற மாட்டார்கள். தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அதுதான் அடிப்படை விதி. அதைத்தான் அம்மா (ஜெயலலிதா) அவர்களும் பின்பற்றினார்கள்.

அந்த அடிப்படை விதியையே மாற்றியதனால் இனி அந்தக் கட்சி பெயர் அதிமுக இல்லை எடப்பாடி திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இப்போது இல்லை.

புரட்சி தலைவரும், புரட்சி தலைவியும் போற்றிக்காத்த இரட்டை இல்லை சின்னத்தை வைத்துக்கொண்டு தொண்டர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றப்பார்க்கிறார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இந்தத் தேர்தலில் எவ்வளவு தான் பணப் பலம் இருந்தாலும், எப்படி கூட்டணி வைத்தாலும் பழனிசாமி தோல்வியைச் சந்திக்கப்போவது உறுதி.

எல்லோருக்கும் துரோகம் செய்தப் பழனிசாமி 2026 தேர்தலுக்கு பிறகு நடுரோட்டில் நிற்கப்போகிறார். அதை எல்லோரும் பார்க்கப் போகிறார்கள்" என்று டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மதுரை விமான நிலையம்: பெயர் சூட்டும் அறிவிப்பால் சர்ச்சை கிளப்பினாரா இபிஎஸ்? தலைவர்கள் சொல்வது என்ன?

"முத்துராமலிங்க தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கவும், மதுரை விமான நிலையத்துக்கு அவர் பெயரைச் சூட்டவும் நடவடிக்கை எடுப்போம்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மாவட்ட பிரசார பய... மேலும் பார்க்க

Canada: ``இந்திய தூதரகத்தை முற்றுகையிடுகிறோம்; இங்கே வராதீர்கள்'' - காலிஸ்தான் ஆதரவாளர்கள்

2023-ம் ஆண்டு காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார் கொலை இந்தியா - கனடா உறவில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசலை உண்டாக்கியது, பெரிதாக்கியது. அவரது கொலைக்கு இந்தியாவே காரணம் என்று கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ர... மேலும் பார்க்க

``சமூக அநீதிகளுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்'' - தந்தை பெரியார் குறித்து பினராயி விஜயன்

தமிழ்நாடு அரசியலில் நீக்கமற நிறைந்திருப்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் எனச் சாமான்ய மக்களால் புகழப்படும் பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு மட்டுமல்லாது, உலக நாடுகளி... மேலும் பார்க்க

ADMK: `உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த காரணம்' - எடப்பாடி பழனிசாமியின் பதிவு வைரல்!

கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன். இதை சகித்துக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி அப்போதே, கட்சிப் பொறுப்ப... மேலும் பார்க்க

``எடப்பாடி முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?'' - டிடிவி தினகரன் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று(செப்.16)இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத... மேலும் பார்க்க

``இந்தியா மூன்றாம் நாட்டின் தலையீட்டை மறுக்கிறது என்று ரூபியோ சொன்னார்'' - பாக். போட்டு உடைத்த உண்மை

கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு & காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதை எதிர்த்து, இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூ... மேலும் பார்க்க