செய்திகள் :

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

post image

அமெரிக்காவின் மிச்சிகன் ஏரியில், 140 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி மாயமான பேய்க் கப்பலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில், கடந்த 1867 ஆம் ஆண்டு 3 அடுக்குகளைக் கொண்ட, எஃப்.ஜே. கிங் எனும் சரக்கு கப்பல் தானியங்கள் மற்றும் இரும்புத் தாதுகளைக் கொண்டு செல்வதற்காகக் கட்டப்பட்டது.

அக்காலத்தில், மிகவும் பிரபலமான கப்பல்களில் ஒன்றாக அறியப்பட்ட எஃப்.ஜே. கிங், 1886 ஆம் ஆண்டு செப்.15 ஆம் தேதி வட அமெரிக்காவின் 5 பெரும் ஏரிகளில் ஒன்றான, அமெரிக்காவின் மிச்சிகன் ஏரியில், சிகாகோ நோக்கிய பயணத்தின்போது புயலில் சிக்கி சேதமானது.

எஸ்கானாபாவில் இருந்து சிகாகோவுக்கு இரும்புத் தாதுவை கொண்டு சென்றபோது 8 முதல் 10 அடி உயரமுள்ள அலைகளினால், சேதமான இந்தக் கப்பல் அதன் பணியாளர்கள் மற்றும் கேப்டன் வில்லியம் கிரிஃபின் ஆகியோரின் கண்முன்னே மிச்சிகன் ஏரியில் மூழ்கி மாயமானது.

இதனைத் தொடர்ந்து, மிச்சிகன் ஏரியில் மூழ்கிய எஃப்.ஜே.கிங் கப்பலை, கடந்த 1970கள் முதல் பல்வேறு ஆய்வாளர்கள் தேடி வந்தனர். அவ்வப்போது, அங்கு இயங்கும் வர்த்தக கப்பல்கள் தங்களது மீன்பிடி வலைகளில், அந்தக் கப்பலின் எச்சங்கள் சிக்கியுள்ளதாகக் கூறிய கதைகளும் ஏராளம்.

பல ஆண்டுகளாக, பல்வேறு குழுக்களின் தேடுதல் வேட்டைகளில் சிக்காததால் எஃப்.ஜே. கிங் பேய்க் கப்பல் (கோஸ்ட் ஷிப்) எனும் அடைமொழியைப் பெற்றது.

இந்த நிலையில், ஆய்வாளர் பிரெண்டன் பைலோட் தலைமையிலான குழுவினர், மிச்சிகன் ஏரியில் மூழ்கி மாயமான எஃப்.ஜே. கிங் கப்பலை, கடந்த ஜூன் மாதம் கண்டுபிடித்துள்ளதாக, விஸ்கான்சின் வரலாற்று சமூகம் மற்றும் விஸ்கான்சின் நீருக்கடி அகழ்வாராய்ச்சி சங்கம் அறிவித்துள்ளன.

அப்பகுதியில் அமைந்துள்ள பெய்லி துறைமுகத்தின் கலங்கரை விளக்கத்தில் இருந்து 0.8 கி.மீ. தூரத்தில் 140 அடி நீளமுள்ள எஃப்.ஜே.கிங் கப்பலை சோனார் உதவியுடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் கப்பல் மூழ்கியபோது, அதில் ஏற்றப்பட்டிருந்த இரும்புத் தாதுகளின் கனத்தினால், கப்பல் உடைந்திருக்கக் கூடும் எனக் கருதப்பட்ட நிலையில், பெரிய பாதிப்புகள் ஏதுமின்று கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Researchers have discovered a ghost ship that sank 140 years ago in Lake Michigan, USA.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் 50க்கும் மேற்பட்ட பிரசாரக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள டிரம்ப், நாளை (செப். 18) ... மேலும் பார்க்க

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றடைந்தார். தனது மனைவி மெலானியாவுடன் சென்ற டிரம்ப்பை, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். பிரிட்டனி... மேலும் பார்க்க

சவுதி அரேபியா சென்றார் பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், சவுதி அரேபியா நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃ... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

சர்வதேச விண்வெளி மையத்துக்கு 5,000 கிலோ எடை கொண்ட சரக்குடன் என்ற விண்கலனின் பிரதான என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக நாசா அறிவித்துள்ளது.மேலும், சிக்னஸ் எக்ஸ்எல் என்ற சரக்கு விண்கலன் பூமியின் சுற்றுவட்டப் ப... மேலும் பார்க்க

காஸா சிட்டியைக் கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம்

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதலை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னதாக காஸா சிட்டி... மேலும் பார்க்க

காஷ் படேலிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை

அமெரிக்காவில் வலதுசாரி ஆா்வலா் சாா்லி கிா்க்கின் படுகொலை தொடா்பான விசாரணையில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் இய... மேலும் பார்க்க