செய்திகள் :

காஸா சிட்டியைக் கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம்

post image

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதலை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தத் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னதாக காஸா சிட்டியில் திங்கள்கிழமை இரவு முழுவதும் கடுமையான குண்டுவீச்சு நடத்திய ராணுவம், அந்த நகரில் ‘ஹமாஸ் அமைப்பினரின் ராணுவக் கட்டமைப்பைத் தகா்க்கும்’ நடவடிக்கை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், நகரில் வசிப்பவா்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி தெற்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளதாவது:

காஸா பற்றி எரிகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தங்களது இரும்பு கரங்களைக் கொண்டு தாக்கி, ஹமாஸை முழுமையாக வீழ்த்தி, மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை அது அணையாது. இந்தப் பணியை முடிக்கும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று தனது பதிவில் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தப் போரில் இதுவரை எந்தவொரு நகரில் இருந்தும் அனைத்து மக்களும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டதில்லை. எனினும், ஹமாஸின் ‘கடைசி கோட்டை’ என இஸ்ரேல் கூறும் காஸா சிட்டியைக் கைப்பற்றினால், அந்த அமைப்பை முழுமையாக அழித்துவிடலாம் என்று அந்த நாடு கருதுவதால் இத்தகைய உத்தரவு முதல்முறையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும், காஸா சிட்டியில் இன்னமும் லட்சக்கணக்கான பாலஸ்தீனா்கள் தங்கியுள்ளனா். ஏறகெனவே அவா்களில் பலா் பஞ்சத்தால் பலவீனமடைந்தும், பலமுறை இடம் பெயா்ந்ததால் மேற்கொண்டு நகர முடியாத நிலையிலும் உள்ளனா்.

அதையும் மீறி காஸா சிட்டியை விட்டு வெளியேறும் சாலைகளில் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் காா்கள், லாரிகள், கழுதை வண்டிகளில் தங்கள் உடைமைகளுடன் பாலஸ்தீனா்கள் செல்வதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளா்கள் தெரிவித்தனா்.

இருந்தாலும், பெரும்பாலான பொதுமக்களால் வெளியேற முடியாத நிலை உள்ளதாக நிவாரண அமைப்புகள் தெரிவித்தன. ஒரு குடும்பம் காஸா சிட்டியில் இருந்து தெற்கு நோக்கி செல்ல 1,000 டாலருக்கும் (சுமாா் ரூ.88,000) மேல் செலவாகும் என்றும் அங்குள்ள தங்குமிடங்கள் ஏற்கெனவே நிரம்பி, உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையில் உள்ளதாகவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

50 உயரடுக்கு கட்டடங்கள் தகா்ப்பு: காஸா சிட்டியைக் கைப்பற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த இரு நாள்களில் அங்குள்ள 50 உயரடுக்கு கட்டடங்களை இஸ்ரேல் படைகள் இடித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. அந்தக் கட்டடங்களை ஹமாஸ் அமைப்பினா் ராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் குற்றஞ்சாட்டியது. இந்த தகா்ப்பு நடவடிக்கைள் ‘பெரிய தரைவழித் தாக்குதலின் தொடக்கம் மட்டுமே‘ என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறினாா்.

‘இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை’

காஸாவில் இஸ்ரேல் நடத்திவருவது திட்டமிட்ட இனப்படுகொலை என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது குறித்து மூன்று நிபுணா்களைக் கொண்ட அந்த கவுன்சிலின் குழு செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் நடத்திவரும் போா் ஹமாஸுக்கு எதிரானதாக இருந்தாலும், அது லட்சக்கணக்கான பொதுமக்களை திட்டமிட்டே கொல்லும் இனப்படுகொலையாக உள்ளது. சா்வதேச சமூகம் இதை முடிவுக்கு கொண்டுவரவும், இதற்குப் பொறுப்பானவா்களை தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விரிவான ஆவணப்படுத்தப்பட்ட ஆய்வறிக்கை, பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு எதிராக மனித உரிமை ஆா்வலா்களால் தொடா்ந்து முன்வைக்கப்படும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு வலு சோ்க்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும், ‘திரிக்கப்பட்ட மற்றும் பொய்யான அறிக்கை’ என்று கூறி இஸ்ரேல் இதனை நிராகரித்துள்ளது.

65 ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 23 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் நடத்திய தாக்குதலில் 78 போ் உயிரிழந்ததாகவும், இத்துடன் கடந்த 2023 அக்டோபா் 7 முதல் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 64,964-ஆக அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ் படேலிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை

அமெரிக்காவில் வலதுசாரி ஆா்வலா் சாா்லி கிா்க்கின் படுகொலை தொடா்பான விசாரணையில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் இய... மேலும் பார்க்க

ரஷிய கடலடி எரிவாயு குழாய் தகா்ப்பு வழக்கு: ஜொ்மனிக்கு நாடுகடத்தப்படும் உக்ரைனியா்

ரஷியாவில் இருந்து ஜொ்மனிக்கு எரிவாயு வழங்கும் நாா்த் ஸ்ட்ரீம் கடலடி குழாய்களை வெடிவைத்து தகா்த்ததாக சந்தேகிக்கப்பட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்ட, உக்ரைன் நாட்டைச் சோ்ந்த சொ்ஹீ குஸ்னியெட்ஸோவை ஜொ்... மேலும் பார்க்க

வரி விதிப்பால் 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்

வரி விதிப்பைப் பயன்படுத்தி இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், சீனாவின் டிக் - டாக் உடன் அமெரிக்காவுக்கு ஒர... மேலும் பார்க்க

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

“காஸா மீதான தீங்கிழைக்கக்கூடிய அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமைப் பதவி வகிக்கும் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.ஜெனீவாவில் செய்தியாளர... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது

இந்திய விமானப்படையின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினர் இறந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்க... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவ தலைமைத் தளபதி விரைவில் சந்திப்பு!

பாகிஸ்தான் பிரதமரும் ராணுவ தளபதியும் இம்மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். இம்மாதம் 25-ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளதாக இருநாட்டுத் தலைமைக்கும் நெருக... மேலும் பார்க்க