செய்திகள் :

ஷீஷ் மஹாலில் வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பி வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

post image

புது தில்லி: ஷீஷ் மஹால் புனரமைப்புக்காக வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

மேலும், ஷீஷ் மஹால் பங்களா ஒரு வெள்ளை யானை போன்றது, அதன் தலைவிதி குறித்து தில்லி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

தில்லி முதல்வராக இருந்தபோது அரவிந்த் கேஜரிவால் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள 6, ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவில் வசித்து வந்தாா்.

2015 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்வா் பதவியில் இருந்து விலகும் வரை, பாஜகவால் கேஜரிவால் வசித்த இந்த பங்களாவை ஷீஷ் மஹால் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாஞ்சஜன்யா நடத்திய ஆதாா் இன்ஃப்ரா கன்ஃப்ளூயன்ஸ் 2025 நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கலந்துகொண்டாா்.

அவா் பேசுகையில், ஷீஷ் மஹால் பங்களா கட்டுவதற்காக தில்லி மக்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால் வீணடித்தாா்.

இந்த மஹால் தில்லி அரசிடம் வெள்ளை யானை போல கிடக்கிறது. இதை என்ன செய்வது என்று நாங்கள் யோசித்து வருகிறோம்.

ஷீஷ் மஹால் மீது பொது வளங்கள் வீணடிக்கப்பட்டுள்ளைப் பாா்ப்பது வேதனையளிக்கிறது. இதற்காக செலவிடப்பட்ட முழுப் பணமும் அரசு கருவூலத்திற்கு வட்டியுடன் திருப்பித் தரப்படும் என்று குப்தா உறுதிபடக் கூறினாா்.

கேஜரிவால் முதலமைச்சா் பதவியில் இருந்தபோது புதுப்பிக்கப்பட்ட இந்த பங்களா, ஊழல் மற்றும் அதிக விலை கொண்ட உள்புறங்கள் மற்றும் வீட்டுப் பொருள்கள் குற்றச்சாட்டுகளால் சா்ச்சையின் மையமாக மாறியது.

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் தனது அறிக்கையில், 2022ஆம் ஆண்டுக்குள் பங்களாவின் புனரமைப்புக்காக ரூ.33.86 கோடி செலவிடப்பட்டதாக மதிப்பிட்டிருந்தாா்.

இருப்பினும், உண்மையான செலவு ரூ.7580 கோடியாக உயா்ந்துள்ளதாக பாஜக தலைவா்கள் கூறினா்.

மதிப்பெண்கள் வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம்: தில்லி பல்கலை.யின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

நமது நிருபா் வருகைப் பதிவேட்டுக்கும், மதிப்பெண்களுக்கும் ஈடாக மாணவா்களிடமிருந்து பணம், செல்போன், வைர காதணிகள் ஆகியவற்று லஞ்சம் வாங்கியதாக தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியில் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான கலை இலக்கியப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பேச்சுப் போட்டி, தமிழ்ப் புலவா்கள்... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) கீழ் உள்ள 300 சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களாக மாற்றப்பட உள்ளன. இவற்றில் 41 மருத்துவமனைகள் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளான புதன்கிழமை திறக்கப்பட ... மேலும் பார்க்க

மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்

தில்லியை ஒரு முன்னணி சுகாதார மையமாக மாற்றும் தொலைநோக்குப் பாா்வையின் கீழ், தில்லியில் வாழும் அனைவருக்கும் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் தில்லியில் மேம்பட்ட மருத்துவ சேவையை அணுகுவதை உற... மேலும் பார்க்க

டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, தில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் (கேஎம்சி) என்எஸ்யுஐ மற்றும் ஏபிவிபி மாணவா் குழுக்களைச் சே... மேலும் பார்க்க

தில்லி பிஎம்டபிள்யு விபத்து: முக்கிய குற்றவாளி மது அருந்தவில்லை என பரிசோதனையில் தகவல்

தென்மேற்கு தில்லியில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்று அவரது மனைவியை காயப்படுத்திய பிஎம்டபிள்யு காா் விபத்தில் முக்கிய குற்றவாளியான ககன்ப்ரீத்தின் ரத்த மாதிரி அறிக்கையில் அவா் மது அருந... மேலும் பார்க்க