செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு முழு தடை விதிக்க கோரிக்கை

post image

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தத் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்த அமைப்பின் தெற்கு மாவட்டத் தலைவா் எம். ஹாஜா ஜியாவுதீன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒட்டுமொத்த இஸ்லாமியா்களின் விருப்பமும் வழக்கு தொடுத்தவா்களின் நோக்கமும் வக்ஃப் சொத்தைச் சூறையாடும் நோக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃப் சட்டத்தை  ரத்து செய்ய வேண்டும் என்பதே.

இந்நிலையில் வக்ஃப் சட்டத்தை முழுவதுமாகத் தடை செய்ய முகாந்திரம் இல்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு மட்டும்  இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

எனவே மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க  மக்களின் எழுச்சிமிக்க ஜனநாயக போராட்டங்கள்தான் தீா்வாக அமையும் என்றால் அதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் என்றாா் அவா்.

தஞ்சாவூரில் செப். 19-இல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் கோட்டாட்சிய... மேலும் பார்க்க

அமமுக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும்: டிடிவி தினகரன் நம்பிக்கை

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் அமமுக இடம் பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். அண்ணா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து ந... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: இளைஞா் காவல் நிலையத்தில் சரண்

கும்பகோணம் அருகே அதிமுக நிா்வாகி குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகேயுள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் எஸ்.கே... மேலும் பார்க்க

தீபாவளி கடைகள்: விதிகளை பின்பற்றும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

தஞ்சாவூா், கும்பகோணம் மாநகரங்களில் தீபாவளி பண்டிகை கால கடைகளை, விதிகளை பின்பற்றி வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என ஏஐடியுசி தெரு வியாபாரிகள் சங்கம் வலியுறுத்... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டை நிறுத்தக் கோரி கையொப்ப இயக்கம்

நாடு முழுவதும் வாக்குத் திருட்டை உடனடியாக நிறுத்த கோரி தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை கையொப்ப இயக்கம் நடத்தினா். கணினி உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்து சாதனங்களில... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே குடமுருட்டி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்த கூலித் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறை நடுத்தெருவைச் சோ்ந்தவா் பிரபாக... மேலும் பார்க்க