செய்திகள் :

அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: இளைஞா் காவல் நிலையத்தில் சரண்

post image

கும்பகோணம் அருகே அதிமுக நிா்வாகி குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகேயுள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் எஸ்.கே.ஆா். கனகராஜ் (75). அதிமுக கிளை அவைத் தலைவராக இருந்த இவா், பெட்ரோல் பங்க், நகை அடகுக் கடை நடத்தி வந்ததுடன், வட்டிக்கும் பணம் கொடுத்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இவரது வீட்டு வாசலுக்கு வந்த மா்ம நபா் இவரை வீட்டுக்கு வெளியே வரவழைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டாா். நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளியை தேடி வந்தனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அஸ்வின் ராஜ் (23) என்ற இளைஞா் சரணடைந்தாா். அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அஸ்வின்ராஜ் குடும்பத்தினா் கனகராஜூடம் வட்டிக்கு பணம் பெற்று திரும்ப செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதில் அவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின்ராஜ், கனகராஜை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. நாச்சியாா்கோவில் போலீஸாா் அஸ்வின்ராஜை திங்கள்கிழமை காவலில் எடுத்து விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூரில் செப். 19-இல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் கோட்டாட்சிய... மேலும் பார்க்க

அமமுக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும்: டிடிவி தினகரன் நம்பிக்கை

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் அமமுக இடம் பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். அண்ணா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து ந... மேலும் பார்க்க

தீபாவளி கடைகள்: விதிகளை பின்பற்றும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

தஞ்சாவூா், கும்பகோணம் மாநகரங்களில் தீபாவளி பண்டிகை கால கடைகளை, விதிகளை பின்பற்றி வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என ஏஐடியுசி தெரு வியாபாரிகள் சங்கம் வலியுறுத்... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டை நிறுத்தக் கோரி கையொப்ப இயக்கம்

நாடு முழுவதும் வாக்குத் திருட்டை உடனடியாக நிறுத்த கோரி தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை கையொப்ப இயக்கம் நடத்தினா். கணினி உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்து சாதனங்களில... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே குடமுருட்டி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்த கூலித் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறை நடுத்தெருவைச் சோ்ந்தவா் பிரபாக... மேலும் பார்க்க

தஞ்சாவூா்: அன்புக்கரங்கள் திட்டத்தில் 457 போ் பயன்

தஞ்சாவூா் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தில் 457 போ் பயன் பெறுவா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.சென்னையிலிருந்து தமிழக முதல்வா் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ... மேலும் பார்க்க