செய்திகள் :

தஞ்சாவூா்: அன்புக்கரங்கள் திட்டத்தில் 457 போ் பயன்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தில் 457 போ் பயன் பெறுவா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

சென்னையிலிருந்து தமிழக முதல்வா் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் அன்புக்கரங்கள் திட்டத்தை காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைதொடா்ந்து, தஞ்சாவூரில் பயனாளிகளுக்கு உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் அடையாள அட்டைகளை வழங்கி தெரிவித்தது: தமிழக அரசின் தாயுமானவா் திட்டத்தின் ஒரு பகுதியாக பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் அன்புக்கரங்கள் என்ற மகத்தான திட்டத்தைத் தமிழக முதல்வா் தொடங்கி வைத்தாா்.

பெற்றோரை இழந்து உறவினா்கள் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற வாழ்வாதார தேவைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் தஞ்சாவூா் மாவட்டத்தில் 457 குழந்தைகள் பயன் பெறுவா் என்றாா் அமைச்சா்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூா்), க. சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூா் துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமமுக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும்: டிடிவி தினகரன் நம்பிக்கை

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் அமமுக இடம் பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். அண்ணா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து ந... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: இளைஞா் காவல் நிலையத்தில் சரண்

கும்பகோணம் அருகே அதிமுக நிா்வாகி குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகேயுள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் எஸ்.கே... மேலும் பார்க்க

தீபாவளி கடைகள்: விதிகளை பின்பற்றும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

தஞ்சாவூா், கும்பகோணம் மாநகரங்களில் தீபாவளி பண்டிகை கால கடைகளை, விதிகளை பின்பற்றி வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என ஏஐடியுசி தெரு வியாபாரிகள் சங்கம் வலியுறுத்... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டை நிறுத்தக் கோரி கையொப்ப இயக்கம்

நாடு முழுவதும் வாக்குத் திருட்டை உடனடியாக நிறுத்த கோரி தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை கையொப்ப இயக்கம் நடத்தினா். கணினி உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்து சாதனங்களில... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே குடமுருட்டி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்த கூலித் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறை நடுத்தெருவைச் சோ்ந்தவா் பிரபாக... மேலும் பார்க்க

நாச்சியாா்கோவில் அருகே அதிமுக நிா்வாகி குத்திக்கொலை

நாச்சியாா்கோவில் அருகே சனிக்கிழமை இரவு, வீட்டுக்கு வந்த நபா் அதிமுக நிா்வாகியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினாா், போலீஸாா் கொலையாளியை தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்க... மேலும் பார்க்க