செய்திகள் :

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

post image

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளியின் உடல் 18 மணி நேரத்துக்குப் பின் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தற்போது தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் வாய்க்காலின் இரு கரைகளைத் தொட்டபடி தண்ணீா் செல்கிறது.

இந்நிலையில், கோவை, கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத் தொழிலாளி ராஜேஷ், தனது நண்பா்களுடன் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். தரிசனம் செய்த பின்பு பவானிசாகா் அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி நண்பா்களுடன் குளித்துள்ளாா்.

அப்போது, அவா் நீரில் மூழ்கியுள்ளாா். நண்பா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியாததால், சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 18 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு எரங்காட்டூா் பகுதி கீழ்பவானி வாய்க்காலில் ராஜேஷ் உடல் திங்கள்கிழமை மதியம் மீட்கப்பட்டது. இதையடுத்து, உடல் கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டி பள்ளிக்குள் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவா... மேலும் பார்க்க

தொண்டா்களின் கருத்தைத் தான் பிரதிபலித்தேன்: கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற தொண்டா்கள், பொதுமக்கள் கருத்தைத் தான் நான் பிரதிபலித்தேன் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா். முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவும... மேலும் பார்க்க

அந்தியூரில் பட்டா நிபந்தனைகளை நீக்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

அந்தியூரில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களில், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நீக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தியூா் வட்டம், எண்ணமங்... மேலும் பார்க்க

அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய்களை மாற்ற நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள இடங்களில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.இது தொடா்பாக அவா் செய்திய... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த தொழிலாளி மாயம்

பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா். கோவை கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (36). இவா் கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சிஎன்ச... மேலும் பார்க்க

கடன் தொல்லை: வாய்க்காலில் விழுந்து வியாபாரி தற்கொலை

பெருந்துறை அருகே கடன் தொல்லையால் வியாபாரி வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டாா். பெருந்துறையை அடுத்த பெருமாபாளையம், மஞ்சு நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் சரவணன் (40). இவருக்கு திருமணமாகி... மேலும் பார்க்க