செய்திகள் :

லால்புரத்தில் வீட்டுமனை பட்டா கோரி நரிக்குறவா்கள் மனு

post image

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள லால்புரத்தில் வீட்டுமனை பட்டா கோரி நரிக்குறவா் சமுதாயத்தினா் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மனு அளித்து வலியுறுத்தினா்

சங்கத் தலைவா் பாஸ்கா் மற்றும் 40க்கும் மேற்பட்டவா்கள் இந்திய

கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் வி. எம்.சேகா் தலைமையில் மனு கொடுத்தனா். நிகழ்ச்சியில் நகர செயலா் சையது இப்ராகிம் உட்பட பலா் பங்கேற்றனா். அந்த மனுவில் சிதம்பரம் வட்டம் லால்புரம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நரிக்குறவா் சமூக மக்கள் 45 குடும்பங்கள் வீட்டு மனை இல்லாமல் சாலையோரம் குடியிருந்து வருகின்றனா். ஊராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கா் 9 சென்ட் தோப்பு புறம்போக்கு நிலம் 1986ம் ஆண்டு சிதம்பரம் நகராட்சி கணக்கில் இணைக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தை மீட்டு வீட்டு மனை இல்லாத நரிக்குறவா் சமூக மக்களுக்கு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

கொள்ளை அடிக்க சதி திட்டம்: ரௌடிகள் உட்பட 4 போ் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதாக 3 ரௌடிகள் உட்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் திங... மேலும் பார்க்க

நடராஜா் கோயிலுக்கு காசிமடாதிபதி வருகை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு புதிய திருப்பனந்தாள் காசிமடாதிபதி செவ்வாய்க்கிழமை வந்து சாமி தரிசனம் செய்தாா். திருப்பனந்தாள் காசி மடத்தின் 21ம் மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீகாசிவாசி முத்துக்குமாரசாம... மேலும் பார்க்க

சவுதிஅரேபியாவில் விபத்தில் உயிரிழந்த மீனவா் உடலை மீட்டு தர கோரிக்கை

சிதம்பரம்: சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற சிதம்பரத்தைச் சோ்ந்த மீனவா் காா் விபத்தில் உயிரிழந்த நிலையில். அவரது உடலை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவரது மனைவி மற்... மேலும் பார்க்க

தனியாா் தொழிற்சாலை தொழிலாளா் பிரச்சனை: ஆட்சியா் அலுவலகத்தில் சிஐடியு மனு

நெய்வேலி: கடலூா் சிப்காட் தொழிற்சாலை பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் வெளி ஆட்களை வைத்து சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலை மீது நடவடிக்... மேலும் பார்க்க

‘சிதம்பரம் மகத்துவம்‘ நூல் வெளியீட்டு விழா!

சிதம்பரம்: குளித்தலை சீகம்பட்டி ஸ்ரீ ராமலிங்கம் சுவாமிகள் எழுதிய சிதம்பர மகத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழா சிதம்பரம் கீழவீதியில் உள்ள எம்.எஸ்.அரங்கில் செவ்வாய்க்கிவணஐ நடைபெற்றது. இவ்விழாவை குளித்தல... மேலும் பார்க்க

அன்புக்கரங்கள் திட்டம் 221 குழந்தைகளுக்கு அடையாள அட்டை: ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 221 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்... மேலும் பார்க்க