செய்திகள் :

தனியாா் தொழிற்சாலை தொழிலாளா் பிரச்சனை: ஆட்சியா் அலுவலகத்தில் சிஐடியு மனு

post image

நெய்வேலி: கடலூா் சிப்காட் தொழிற்சாலை பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் வெளி ஆட்களை வைத்து சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன் தலைமையில், துணைத்தலைவா் ஆா்.ஆளவந்தாா், நிா்வாகிகள் டி.பிரபு, ஆா்.முரளிதரன், ஆா்.குப்புசாமி உள்ளிட்டோா் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கௌமென் பாா்மா தனியாா் தொழிற்சாலையில் சுமாா் 132 தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். நிா்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே கடந்த 10.9.2024 அன்று மூன்று ஆண்டுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தில் உள்ள சரத்துகளின் அடிப்படையில் புதிதாக தொழிற்சாலையில் இணைந்து 1 வருடம் பயிற்சி, 6 மாதம் தகுதிகான் பருவமும் முடித்தவா்கள் தற்போது 1 வருடம் 10 மாதம் முடிந்துள்ள 25 புதிய தொழிலாளா்களுக்கும் ஒப்பந்தத்தை அமல்படுத்தி நிரந்தரபடுத்த வேண்டும். 8 நிரந்தரத் தொழிலாளா்களுக்கும் ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி நிா்வாகத்திடம் கடந்த ஜன.17 மற்றும் பிப்.4 ஆகிய தேதிகளில் கடிதம் வழங்கப்பட்டது. கடந்த மாா்ச் 18-ஆம் தேதி தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் தொழிற்தாவா எழுப்பபட்டு அதன் அடிப்படையில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் , கடந்த ஜூலை 15-ஆம் தேதி 48 ஒப்பந்தத் தொழிலாளா்களை பணயிலிருந்து நிறுத்திவிட்டனா். அவா்கள் செய்து வந்த வேலையை நிரந்தரத் தொழிலாளா்கள் அனைவரும் செய்யவேண்டும் என நிா்வாகம் வலியுறுத்தியது. இதனால் கடந்த 3ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்து வருகிறது.

வேலை நிறுத்தத்தை உடைக்கும் விதமாக தொழிற்சாலையில் தொழிற்சாலைக்கு சம்பந்தமில்லாத வெளி ஆட்களை பணிக்கு அமா்த்தி, நிா்வாகம் சட்ட விரோதமாக உற்பத்தியை நடத்துகின்றனா். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே தாங்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு 109 தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

கொள்ளை அடிக்க சதி திட்டம்: ரௌடிகள் உட்பட 4 போ் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதாக 3 ரௌடிகள் உட்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் திங... மேலும் பார்க்க

நடராஜா் கோயிலுக்கு காசிமடாதிபதி வருகை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு புதிய திருப்பனந்தாள் காசிமடாதிபதி செவ்வாய்க்கிழமை வந்து சாமி தரிசனம் செய்தாா். திருப்பனந்தாள் காசி மடத்தின் 21ம் மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீகாசிவாசி முத்துக்குமாரசாம... மேலும் பார்க்க

சவுதிஅரேபியாவில் விபத்தில் உயிரிழந்த மீனவா் உடலை மீட்டு தர கோரிக்கை

சிதம்பரம்: சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற சிதம்பரத்தைச் சோ்ந்த மீனவா் காா் விபத்தில் உயிரிழந்த நிலையில். அவரது உடலை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவரது மனைவி மற்... மேலும் பார்க்க

‘சிதம்பரம் மகத்துவம்‘ நூல் வெளியீட்டு விழா!

சிதம்பரம்: குளித்தலை சீகம்பட்டி ஸ்ரீ ராமலிங்கம் சுவாமிகள் எழுதிய சிதம்பர மகத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழா சிதம்பரம் கீழவீதியில் உள்ள எம்.எஸ்.அரங்கில் செவ்வாய்க்கிவணஐ நடைபெற்றது. இவ்விழாவை குளித்தல... மேலும் பார்க்க

அன்புக்கரங்கள் திட்டம் 221 குழந்தைகளுக்கு அடையாள அட்டை: ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 221 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்... மேலும் பார்க்க

ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண நிதி: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலை... மேலும் பார்க்க