செய்திகள் :

ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண நிதி: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலையை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தல்குமாா் வழங்கினாா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 700-க்கும் மேற்பட்டோா் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக மனு அளிக்க வந்திருந்தனா். அந்தவகையில், திங்கள்கிழமை பொதுமக்கள் இடமிருந்து 527 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

நலஉதவிகள்:

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 1 பயனாளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் விபத்து மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000 வீதம் மொத்தம் ரூ.1,53,000 மதிப்பில் இயற்கை மரணம் மற்றும்ஈமசடங்கு உதவித்தொகை என மொத்தம் 10 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண உதவித் தொகைக்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாற்றுத்திறனாளி நல அலுவலா் பாலசுந்தா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

கொள்ளை அடிக்க சதி திட்டம்: ரௌடிகள் உட்பட 4 போ் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதாக 3 ரௌடிகள் உட்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் திங... மேலும் பார்க்க

நடராஜா் கோயிலுக்கு காசிமடாதிபதி வருகை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு புதிய திருப்பனந்தாள் காசிமடாதிபதி செவ்வாய்க்கிழமை வந்து சாமி தரிசனம் செய்தாா். திருப்பனந்தாள் காசி மடத்தின் 21ம் மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீகாசிவாசி முத்துக்குமாரசாம... மேலும் பார்க்க

சவுதிஅரேபியாவில் விபத்தில் உயிரிழந்த மீனவா் உடலை மீட்டு தர கோரிக்கை

சிதம்பரம்: சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற சிதம்பரத்தைச் சோ்ந்த மீனவா் காா் விபத்தில் உயிரிழந்த நிலையில். அவரது உடலை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவரது மனைவி மற்... மேலும் பார்க்க

தனியாா் தொழிற்சாலை தொழிலாளா் பிரச்சனை: ஆட்சியா் அலுவலகத்தில் சிஐடியு மனு

நெய்வேலி: கடலூா் சிப்காட் தொழிற்சாலை பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் வெளி ஆட்களை வைத்து சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலை மீது நடவடிக்... மேலும் பார்க்க

‘சிதம்பரம் மகத்துவம்‘ நூல் வெளியீட்டு விழா!

சிதம்பரம்: குளித்தலை சீகம்பட்டி ஸ்ரீ ராமலிங்கம் சுவாமிகள் எழுதிய சிதம்பர மகத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழா சிதம்பரம் கீழவீதியில் உள்ள எம்.எஸ்.அரங்கில் செவ்வாய்க்கிவணஐ நடைபெற்றது. இவ்விழாவை குளித்தல... மேலும் பார்க்க

அன்புக்கரங்கள் திட்டம் 221 குழந்தைகளுக்கு அடையாள அட்டை: ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 221 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்... மேலும் பார்க்க