செய்திகள் :

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

post image

சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக காவல் துறையினா் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீ ட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகக் கூறி, மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின்பேரில், அவா் மீது சென்னை மாநகர இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா் நீதிமன்றம், விசாரணை என்ற பெயரில் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தரப்பில், மத ஒற்றுமையை சீா்குலைத்து சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் மதுரை ஆதீனம் பேசியதால்தான் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரின் விசாரணைக்கு அவா் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆதீனம் தரப்பில், போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படுகிறது. சிலா் சீருடையில்லாமல் வந்து விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அப்போதே முடிந்து போய் இருக்கும். நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் போலீஸாா் அரசியல் கண்ணோட்டத்துடன் வழக்குப்பதிவு செய்து பெரிதுபடுத்தியுள்ளதாக கருத்து தெரிவித்தாா்.

பின்னா் இந்த வழக்கின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை போலீஸாா் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அதுவரை மதுரை ஆதீனத்துக்கு எதிராக காவல் துறையினா் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவையும் நீட்டித்து உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

திருவண்ணாமலையில் மலைப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 554 ஏக்கா் பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழு சென்ன... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தன்னந்தனியாக நிற்பது உறுதி என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, அதிமுக சாா்பில் சென்னை கோ... மேலும் பார்க்க

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

சென்னை: சென்னையில் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பதிவுத் துறை அலுவலகக் கட்டடத்தை அத்துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதன... மேலும் பார்க்க

நாய்க்கடிக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: பொது சுகாதாரத் துறை

சென்னை: நாய் கடித்தால் தாமதிக்காமல் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சம் தெருநாய்கள் வரை இருக்கலாம் என உத்தேசிக்கப... மேலும் பார்க்க

மின்வாரிய கடனை அடைக்க விரைவில் செயல்திட்டம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

சென்னை: தமிழக மின்வாரியத்தின் கடனை அடைப்பதற்கான செயல்திட்டம் தமிழக அரசால் கொண்டவரப்படும் என்று மின்சார மேல்முறையீட்டு தீா்ப்பாயத்திடம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இலவச மின்சாரம்... மேலும் பார்க்க

மோடி பிறந்த தினம் கொண்டாட சிறப்புக்குழு நியமனம்

சென்னை: பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி சேவை இருவாரம் எனும் நிகழ்ச்சிகள் நடத்த சிறப்புக் குழுவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நியமித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க