செய்திகள் :

"காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் குடிநீர் குழாயில் காற்றுதான் வருகிறது" - விஜயபாஸ்கர் தாக்கு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,

"புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. ஆனால், தற்போது மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும், சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் புதுக்கோட்டை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் காற்றுதான் வருகிறது. இரு வாரங்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் அடியோடு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களோடு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய தி.மு.க-வினர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏன்?

தமிழகம் முழுவதும் போதைப் பொருள், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.

சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்

இதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல், ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடும் வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சின்னதுரை செய்து வருகிறார். ஆட்சியின் கடைசி கால கட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டத்தை நடத்தி மக்களை தி.மு.க அரசு ஏமாற்றி வருகிறது.

தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. எனவே, எத்தனை கோடி ரூபாயைக் கொடுத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழகத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அன்புக்கரங்கள்: "குழந்தை தொழிலாளர்களாக மாறக் கூடாது என்பதற்காக இத்திட்டம்" - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்புக் கரங்கள் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.இதில் அமைச்சர... மேலும் பார்க்க

Ind vs Pak: "ரூ.1.5 லட்சம் கோடிக்கு சூதாட்டம்; பாக்., போகும் பணம்" - சஞ்சய் ராவுத் MP சொல்வது என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று துபாயில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தத... மேலும் பார்க்க

"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடியாது"-துரை வைகோ

ம.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அண்ணாவின் 117-வது பிறந்த நாளான இன்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்ட... மேலும் பார்க்க

"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"- நயினார் விளக்கம்

"ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. 2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும்" என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.ஜி.எஸ்.டி 2.0...பூத் கமிட்டி கூட்டத... மேலும் பார்க்க

"அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை மத்தியில் இருந்தவர்கள் காப்பாற்றினர்" - இபிஎஸ்

அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செப்டம்பர் 5-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார்.அந்தக் கடைசி நாளான ந... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தும் அருகதை அதிமுக-வைத் தவிர யாருக்கும் இல்லை' - ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே. புதிதாக வரும் ... மேலும் பார்க்க