செய்திகள் :

"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடியாது"-துரை வைகோ

post image

ம.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், அண்ணாவின் 117-வது பிறந்த நாளான இன்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

durai vaiko

இந்த மாநாட்டில் பேசிய துரை வைகோ, "இந்த மாநாடு நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. பெரியார், அண்ணா பங்களிப்பு இல்லை என்றால் இந்த மண்ணில் சுயமரியாதை, சமூக நீதி, பெண்ணுரிமை, இரு மொழி கொள்கை என எதுவும் இல்லாமல் போயிருக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அண்ணாவின் சித்தாந்தம்தான் காரணம்.

ஆங்கில மொழியைத் தவிர்த்து விட்டு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்த வட மாநிலங்களின் நிலை நமக்குத் தெரியும். இருமொழி கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்கள்.

தமிழக மாணவ, இளைஞர்கள் மீது ஒன்றிய அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடித்தளத்தைத் தகர்த்து விட்டு, பன்முக கலாசாரத்தை அகற்ற பா.ஜ.க முயல்கிறது. இந்தியைத் திணிப்பதன் மூலம் தமிழக இளைஞர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.

புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் கல்விக்கான நிதியைத் தர மறுக்கிறார்கள். கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி என எந்த நிதியையும் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு முழுமையாகவும், முறையாகவும் வழங்குவதில்லை. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில சுயாட்சி கொள்கைக்கு வேட்டு வைக்கிறார்கள்.

durai vaiko
durai vaiko

சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவியைப் பறிக்கலாம் என்கிற மசோதாவை எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றி உள்ளார்கள். இது, பாசிச சட்டம். எதிர்கட்சிகள்/ ஆளும் மாநில அரசுகளை மிரட்ட தான் இதைப் பயன்படுத்துவார்கள்.

இந்தச் சட்டத்தை பா.ஜ.க அரசு திரும்ப பெற வேண்டும். ம.தி.மு.க-வை அழிக்க 32 ஆண்டுகளாகச் சிலர் முயற்சித்தார்கள். அது, அப்போது முடியவில்லை. இப்போதும் முடியவில்லை... எப்போதும் முடியாது. நான் விழப்போவதுமில்லை, நீங்கள் வீழபோவதுமில்லை. ம.தி.மு.க எப்போதும் வீழப்போவதில்லை" என்றார்.

துரை வைகோ தன் பேச்சின் போது இடையே மாநாட்டிற்கு உழைத்தவர்களுக்கு நன்றி கூறினார். அப்போது, அவர் கண் கலங்கினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திருச்சி மதிமுக மாநாடு: "என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை" - வைகோ பேச்சு

ம.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அண்ணாவின் 117-வது பிறந்த நாளான நேற்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், சிறு... மேலும் பார்க்க

அன்புக்கரங்கள்: "குழந்தை தொழிலாளர்களாக மாறக் கூடாது என்பதற்காக இத்திட்டம்" - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்புக் கரங்கள் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.இதில் அமைச்சர... மேலும் பார்க்க

Ind vs Pak: "ரூ.1.5 லட்சம் கோடிக்கு சூதாட்டம்; பாக்., போகும் பணம்" - சஞ்சய் ராவுத் MP சொல்வது என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று துபாயில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தத... மேலும் பார்க்க

"காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் குடிநீர் குழாயில் காற்றுதான் வருகிறது" - விஜயபாஸ்கர் தாக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,"புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங... மேலும் பார்க்க

"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"- நயினார் விளக்கம்

"ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. 2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும்" என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.ஜி.எஸ்.டி 2.0...பூத் கமிட்டி கூட்டத... மேலும் பார்க்க

"அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை மத்தியில் இருந்தவர்கள் காப்பாற்றினர்" - இபிஎஸ்

அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செப்டம்பர் 5-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார்.அந்தக் கடைசி நாளான ந... மேலும் பார்க்க