செய்திகள் :

புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.16) அதிரடியாக சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.

உலகளவிலான பொருளாதார நிச்சயமற்றத் தன்மை, அமெரிக்காவின் வர்த்தக போரால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் பங்குச்சந்தை முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.

இதனால், நிகழாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரன் சுமார் ரூ.20,000-க்கும் மேல் உயர்ந்தது.

சென்னையில் இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை உயா்ந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ.81,920- என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. பின்னர், சனிக்கிழமையும், அதைத்தொடர்ந்து திங்கள்கிழமையும் சேர்த்து ரூ.280 குறைந்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 16) அதிரடியாக கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.10,280-க்கும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.82,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதம் துவங்கவிருப்பதால், வரும் நாள்களில் சுப நிகழ்ச்சிகள் குறைவு என்பதாலும் தங்கத்தின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், உலகளவிலான பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக விலைக் குறைவுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகவும், வருங்காலங்களில் விலை தொடர்ந்து உயரவே வாய்ப்பிருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒருபுறம் மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தாலும், எந்தவித ஆரவாரமுமின்றி வெள்ளி விலையும் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.

வெள்ளி விலையும் இதுவரை இல்லாத அளவில் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,44,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold nears new high of Rs. 83,000! Silver prices soar!

இதையும் படிக்க : ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

பாஜக கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை வருகை!

சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பாஜக குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட... மேலும் பார்க்க

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுகவுக்கு, சில செல்லாக்காசுகள் சலசலப்பு ஏற்படுத்தினாலும், எந்த பின்னடையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி தில்லிக்குச் சென்றது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு... மேலும் பார்க்க

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

சென்னையில் இன்று(செப். 16) அதிகாலை பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே விடிய, விடிய பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டதால... மேலும் பார்க்க

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை உயர்நிலை மேம்பாலத்திற்கு கீழே இளைஞர் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்நிலை மேம்பாலத்திற்குக் கீழே வாலிபர் ஒ... மேலும் பார்க்க

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கோவில்பட்டி: சாகித்திய அகாதெமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ரா. பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்... மேலும் பார்க்க