செய்திகள் :

பாஜக - அதிமுக கூட்டணி: ”வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 முனைப்போட்டி இருக்கலாம்” - நயினார் நாகேந்திரன்

post image

நெல்லையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை இணைப்பது குறித்து இப்போது என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷா மற்றும் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அதன்பிறகு நல்லதே நடக்கும். நானும் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க தலைவர்களுடன் கூட்டணி பற்றி பேசியுள்ளேன். டி.டி.வி தினகரன் கூறியபடி வரும் சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப்போட்டியும் இருக்கலாம், 5 முனைப்போட்டியும் இருக்கலாம்.

ஆனால், தேர்தலில் ஜெயிக்கப் போவது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். அ.தி.மு.கவில் எந்தவித குழப்பமும் இல்லை. செங்கோட்டையன் திடீர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்பதிலும் உண்மையில்லை.

அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால்தான் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பா.ஜ.க தலைவர்களைச் சந்திக்கிறார். நடிகர் விஜய்யின் கட்சி கூட்டம், அரசியல் பயணம் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. கூட்டம் சேர்த்தால் மட்டும் ஜெயிக்க முடியுமா? வாக்குகள் வாங்கினால் மட்டுமே ஜெயிக்க முடியும்” என்றார்.    

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"எடப்பாடிதான் முதல்வர் என்றதும் செம்மலை சுவர் எகிறிக் குதித்து ஓடினார்" - கூவத்தூர் குறித்து தினகரன்

சென்னையில் நேற்று (செப்.15) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவ... மேலும் பார்க்க

"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக எம்எல்ஏக்கள்" - இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் பதில்

சென்னையில் நேற்று (செப்.16) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர்.கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவி... மேலும் பார்க்க

அதிமுக: "தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்?" - இபிஎஸ்யை விமர்சித்த டிடிவி தினகரன்

தஞ்சாவூரில் இன்று (செப்டம்பர் 16) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அப்போது, "பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல. அதிமுக எம... மேலும் பார்க்க

பாமக: "கூட்டணி குறித்து தலைவர் அன்புமணிதான் முடிவெடுப்பார்" - பொருளாளர் திலகபாமா சொல்வது என்ன?

அன்புமணி ராமதாஸை பா.ம.க தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளதாக சிவகாசியில் பா.ம.க பொருளாளர் திலகபாமா தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இதனைத் தொடர்ந்து செய்த... மேலும் பார்க்க

திருச்சி மதிமுக மாநாடு: "என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை" - வைகோ பேச்சு

ம.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அண்ணாவின் 117-வது பிறந்த நாளான நேற்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், சிறு... மேலும் பார்க்க

அன்புக்கரங்கள்: "குழந்தை தொழிலாளர்களாக மாறக் கூடாது என்பதற்காக இத்திட்டம்" - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்புக் கரங்கள் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.இதில் அமைச்சர... மேலும் பார்க்க