செய்திகள் :

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

post image

பிகாரில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும் என பிகார் அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, மாணவ விண்ணப்பதாரர்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும், மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்களுக்கு 1 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன்கள் வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் பிகார் அரசு சிறப்பு திட்டத்தை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி கல்விக்கடன் பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கடந்த 2016, அக்டோபர் 2 முதல் பிகார் மாணவர் கல்விக்கடன் திட்டம் நடைமுறையில் உள்ளது.

முன்னதாக ரூ. 2 லட்சம் வரையிலான கடனை 60 மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். தற்போது அதிகபட்சமாக 84 மாதாந்திர தவணைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ. 2 லட்சத்திற்கு மேல் உள்ள கடன்களுக்கு, திருப்பிச் செலுத்தும் காலம் 84 மாதத் தவணைகளிலிருந்து அதிகபட்சமாக 120 மாதத் தவணைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்வதே தனது அரசின் நோக்கம். இந்த முடிவுகள் மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்கும், அவர்கள் அதிக உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் உயர்கல்வியைத் தொடர உதவும். இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாமல், மாநிலத்தின் மற்றும் நாட்டின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்று அவர் கூறினார்.

The Bihar government on Tuesday announced that interest-free loans will be provided to students who passed the class 12 board examinations under the Student Credit Card Scheme to help them pursue higher education.

இதையும் படிக்க:காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

சத்தீஸ்கரில், ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் ஒருவர், பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.16) சரணடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில், தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பில் கடந்த 2005 ... மேலும் பார்க்க

பிரதமரின் பிறந்தநாளில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட ஒடிசா அரசுத் திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு 75 லட்சம் மரக்கன்றுகளை நட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் தேர்தல் முறையில் செயல்படுத்தப்படும் என வனத்துற... மேலும் பார்க்க

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள அரசின் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க

ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மோரீஷஸ் பிரதமர் அஞ்சலி!

தேசிய தலைநகரில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அஞ்சலி செலுத்தினார். 8 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த செப். 9-ம் தேதி ராம்கூலம் இந்தியா வந்தாா். பிரதமா... மேலும் பார்க்க

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! முதல் 15 நிமிட முன்பதிவு ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே!

ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் அனுமதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சக... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித் தீா்த்த மழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

மும்பை: மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென அதிக மழை பெய்தது. தாழ்வான இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலை எதிா்கொண்டனா். மும்பை மற்றும் அதன் ... மேலும் பார்க்க