செய்திகள் :

பிரதமரின் பிறந்தநாளில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட ஒடிசா அரசுத் திட்டம்!

post image

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு 75 லட்சம் மரக்கன்றுகளை நட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தேர்தல் முறையில் செயல்படுத்தப்படும் என வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சத்யபிரத் சாஹு தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக திங்கள்கிழமை மாலை முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மரக்கன்றுகள் நடப்படும். இந்தத் திட்டம் தேர்தல் முறையில் கண்காணிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அதன்படி, வனத்துறை 15 லட்சம் மரக்கன்றுகளும், பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் 34 லட்சம் மரக்கன்றுகளும், தொழில்துறை சார்பில் 15 லட்சம் மரக்கன்றுகளும், வேளாண் துறையின்படி 23 லட்சம் மரக்கன்றுகள் நடவுள்ளது.

மேலும், மாநிலத்தில் உள்ள மத்திய ஆயுதப்படைகள் 2.2 லட்சம் மரக்கன்றுகளும், காவல்துறை சார்பில் 3 லட்சம் மரக்கன்றுகளும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 2 லட்சம் மரக்கன்றுகளையும் நடவுள்ளதாக அவர் கூறினார்.

மரக்கன்று நடும் பணியில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்கள், 15 லட்சம் பள்ள மாணவர்கள், 76 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள், 17,500 பாதுகாப்பு சங்கங்கள், 1 லட்சம் தேசிய நலத்திட்ட உதவியாளர்கள், 16,500 மதர் இந்தியா தன்னார்வலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் என மொத்தம் 25 லட்சம் பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று சாஹு கூறினார்.

மரக்கன்றுகளை நடும்போது அனைவரும் சுயபடம் (செல்ஃபி) எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுமாறு முதல்வர் மோகன் சரண் மாஜி வலியுறுத்தினார்.

The Odisha government is planning to plant 75 lakh saplings on Wednesday to mark Prime Minister Narendra Modi's 75th birthday, an official said.

இதையும் படிக்க: மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

சத்தீஸ்கரில், ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் ஒருவர், பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.16) சரணடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில், தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பில் கடந்த 2005 ... மேலும் பார்க்க

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள அரசின் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

பிகாரில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும் என பிகார் அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, மாணவ விண்ணப்பதாரர்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும், மாணவிகள், மாற்... மேலும் பார்க்க

ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மோரீஷஸ் பிரதமர் அஞ்சலி!

தேசிய தலைநகரில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அஞ்சலி செலுத்தினார். 8 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த செப். 9-ம் தேதி ராம்கூலம் இந்தியா வந்தாா். பிரதமா... மேலும் பார்க்க

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! முதல் 15 நிமிட முன்பதிவு ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே!

ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் அனுமதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சக... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித் தீா்த்த மழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

மும்பை: மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென அதிக மழை பெய்தது. தாழ்வான இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலை எதிா்கொண்டனா். மும்பை மற்றும் அதன் ... மேலும் பார்க்க