செய்திகள் :

ADMK: "அரிதாரம் பூசியவரெல்லாம் அரசியல் செய்ய முடியுமா என்றனர்; ஆனால்..." - செல்லூர் ராஜூ

post image

"மு.க.ஸ்டாலின் எல்லாவற்றையும் பேச்சுக்காகதான் சொல்வார், ஆனால், செயல்திறன் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியபோது "அறிஞர் அண்ணா பிறந்திருக்காவிட்டால் தமிழர்களின் பெருமை உலகெங்கும் சென்றிருக்காது, அண்ணாவின் பேச்சு எம்ஜிஆரை ஈர்த்ததால் 1952 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றவர் எம்ஜிஆர்.

திமுக ஆட்சியில் அமர்வதற்காக எம்ஜிஆர் பம்பரம் போல் சுற்றிச் சுழன்று பணியாற்றினார், கருணாநிதியை திமுக தலைவர் ஆக்குவதற்கு பாடுபட்டவர். எம்ஜிஆரை பதம் பார்த்தவர்தான் கருணாநிதி. திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டாலும் அந்த இயக்கத்திலிருந்து எம்ஜிஆர் எந்த ஒரு பங்கும் கேட்கவில்லை, திமுக-வை அண்ணா உருவாக்கியதால் அந்த இயக்கத்தில் எந்த ஒரு உரிமையும் கேட்காமல் திமுகவை விட்டு வெளியேறினார்.

அண்ணாவின் கொள்கையிலிருந்து கருணாநிதி மாறியதால் அதிமுக-வை எம்ஜிஆர் உருவாக்கினார். அண்ணாவின் கொள்கைகளை ஏற்று தமிழகத்தின் அசைக்க முடியாத தலைவராக எம்ஜிஆர் செயல்பட்டார், அரிதாரம் பூசியவர் எல்லாம் அரசியல் செய்ய முடியுமா? என கருணாநிதி கேலி கிண்டல் செய்தார். கேலி பேசியவர்களின் வாயை அடைக்கும் வகையில் எம்ஜிஆர் அதிமுகவை வழி நடத்தினார்.

செல்லூர் ராஜூ

எம்ஜிஆரின் கொள்கைகள் எல்லாவற்றையும் ஜெயலலிதா திட்டங்களாக செயல்படுத்தினார், எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தெடுத்த அதிமுக-வை எடப்பாடி பழனிசாமி கண் துஞ்சாமல் காத்து வருகிறார், சாமானிய மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகத் தேர்வு செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லாவற்றையும் பேச்சுக்காகதான் சொல்வார், ஆனால், செயல்திறன் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்" என்றார்.

Trump: நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக அவதூறு வழக்கு; ரூ.1.3 லட்சம் கோடி இழப்பீடு கேட்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் மீது வழக்கு தொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அவரைக் குறித்து வெளியிடப்பட்ட பொய்-செய்த... மேலும் பார்க்க

இளையராஜா பாராட்டு விழா: "பெண்களை அழைக்காதது ஏன்?" - குஷ்பு கேள்வி

பாஜக மையக்குழு கூட்டம் பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் தலைமையில் சென்னை அக்கறையில் இன்று ( செப்.16) நடைபெற்று வருகிறது.2026 சட்டமன்றத் தேர்தலை ஓட்டி கட்சியில் நிலவும் சிக்கல்களுக்கு... மேலும் பார்க்க

"எடப்பாடிதான் முதல்வர் என்றதும் செம்மலை சுவர் எகிறிக் குதித்து ஓடினார்" - கூவத்தூர் குறித்து தினகரன்

சென்னையில் நேற்று (செப்.15) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவ... மேலும் பார்க்க

"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக எம்எல்ஏக்கள்" - இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் பதில்

சென்னையில் நேற்று (செப்.16) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர்.கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவி... மேலும் பார்க்க

பாஜக - அதிமுக கூட்டணி: ”வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 முனைப்போட்டி இருக்கலாம்” - நயினார் நாகேந்திரன்

நெல்லையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை இணைப்பது குறித்து இப... மேலும் பார்க்க

அதிமுக: "தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்?" - இபிஎஸ்யை விமர்சித்த டிடிவி தினகரன்

தஞ்சாவூரில் இன்று (செப்டம்பர் 16) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அப்போது, "பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல. அதிமுக எம... மேலும் பார்க்க