செய்திகள் :

"அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக எம்எல்ஏக்கள்" - இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் பதில்

post image

சென்னையில் நேற்று (செப்.16) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர்.

கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் " என்றும், "அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்.எல்.ஏக்களை கடத்திக்கொண்டு சென்றார். அப்படிப்பட்டவர்களையும், கட்சியில் சேர்க்கணுமா? இதையெல்லாம் யார் ஏற்றுக்கொள்வது?" என்று யாரையும் பெயர் குறிப்பிடாமல் பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் இன்று (செப்.16) தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

"நான் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க முயலவில்லை. தன்மானம்தான் முக்கியம் எனக் கூறிவிட்டு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது ஏன்? செங்கோட்டையனைக் கைக்கூலி என்று கூறுகிறார். அவர் யாரைச் சொல்கிறார்.

எடப்பாடி பழனிசாமி பேசுவதை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம். தோல்வி பயத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி உளறுகிறார். பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல. அதிமுக எம்.எல்.ஏக்கள் தான்.

பழனிசாமி நம்பகத்தன்மையற்ற மனிதர் என எல்லோருக்கும் தெரியும். பழனிசாமி படுபாதாளத்துக்குத் தள்ளப்படுவார். அதிமுக தோற்றால் நான் காரணம் அல்ல. உறுதியாக பழனிசாமி இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்.

துரோகத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் எப்படி அந்தக் கூட்டணியில் இருக்க முடியும். நான்கு தலைமையில் நான்கு கூட்டணி அமையும். திமுக தலைமையில் ஒரு கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைக்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இந்த 4 கூட்டணிகள்தான் தேர்தலில் களம் இறங்கும். அதிமுகவின் 20 சதவீத வாக்குகள் 10 சதவீதமாகக் குறையப் போவது உறுதி. அதிமுக தோற்றால் நான் காரணம் இல்லை. பழனிசாமி படுபாதாளத்துக்குத் தள்ளப்படுவார். அதிமுக கூட்டணிக்கு அமமுக உறுதியாகச் செல்லாது.

பழனிசாமி நம்பகத்தன்மையற்ற மனிதர் என்று அனைவருக்கும் தெரியும். சில நலம் விரும்பிகள் சொன்னதால்தான் நாங்கள் இவ்வளவு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தோம்" என்று பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கத்தார் மீது தாக்குதல்: ஒன்றுதிரண்ட இஸ்லாமிய நாடுகள்; NATO போன்ற ராணுவ கூட்டமைப்பு உருவாகிறதா?

மத்திய கிழக்கில் இஸ்ரேல் - காசா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா, மேற்கு கரை, லெபனான், சிரியா, ஈரான், இராக், துனிஷா, ஏமன், கத்தார... மேலும் பார்க்க

Dmk: `தினம் ஒரு அமைச்சர்; 1 லட்சம் சேர், முதல்வருக்காக தனி சாலை... '- முப்பெரும் விழா அப்டேட்

கரூரில் தி.மு.க சார்பில் நாளை முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க மூத்த நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் இருந்து வரும்... மேலும் பார்க்க

Trump: நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக அவதூறு வழக்கு; ரூ.1.3 லட்சம் கோடி இழப்பீடு கேட்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் மீது வழக்கு தொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அவரைக் குறித்து வெளியிடப்பட்ட பொய்-செய்த... மேலும் பார்க்க

ADMK: "அரிதாரம் பூசியவரெல்லாம் அரசியல் செய்ய முடியுமா என்றனர்; ஆனால்..." - செல்லூர் ராஜூ

"மு.க.ஸ்டாலின் எல்லாவற்றையும் பேச்சுக்காகதான் சொல்வார், ஆனால், செயல்திறன் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.செல்லூர் ராஜூஅறிஞர் அண்ணா பிறந்... மேலும் பார்க்க

இளையராஜா பாராட்டு விழா: "பெண்களை அழைக்காதது ஏன்?" - குஷ்பு கேள்வி

பாஜக மையக்குழு கூட்டம் பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் தலைமையில் சென்னை அக்கறையில் இன்று ( செப்.16) நடைபெற்று வருகிறது.2026 சட்டமன்றத் தேர்தலை ஓட்டி கட்சியில் நிலவும் சிக்கல்களுக்கு... மேலும் பார்க்க

"எடப்பாடிதான் முதல்வர் என்றதும் செம்மலை சுவர் எகிறிக் குதித்து ஓடினார்" - கூவத்தூர் குறித்து தினகரன்

சென்னையில் நேற்று (செப்.15) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவ... மேலும் பார்க்க