செய்திகள் :

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக தலைவர் விஜய், திருச்சியில் செப். 13 ஆம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் இறுதி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்த சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விஜயின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அவர் ஒரு நாளில் 3 மாவட்டங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அது 2 மாவட்டமாக மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மக்கள் அதிகம் கூடியதால் திட்டமிட்டபடி அவர் பிரசாரத்தை மேற்கொள்ள முடியாமல் போனது. இதனாலே அவரது சுற்றுப் பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.

விஜய்யின் தேர்தல் பிரசார பயணம் குறித்த புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Reports says that there has been a change in the tour schedule of TVK Party leader Vijay.

ஆயுத பூஜை, தீபாவளி சிறப்பு ரயில்கள்: நாளை முன்பதிவு தொடக்கம்!

பண்டிகைக் கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவை நாளை காலை 8 மணி முதல் பயணிகள் செய்துக்கொள்ளலாம் என்று தெர... மேலும் பார்க்க

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4 புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 16) திறந்து வைத்தார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.... மேலும் பார்க்க

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்றுள்ளார். தில்லி சென்றடைந... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ரூரல் ஊராட்சி அடியாமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவைச் சேர்ந்த குமார் - ர... மேலும் பார்க்க

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

கூவத்தூர் நடந்தது என்ன தெரியுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் முதல்முறையாக செய்தியாளர் பேசியுள்ளார்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் ... மேலும் பார்க்க