செய்திகள் :

ஆயுத பூஜை, தீபாவளி சிறப்பு ரயில்கள்: நாளை முன்பதிவு தொடக்கம்!

post image

பண்டிகைக் கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவை நாளை காலை 8 மணி முதல் பயணிகள் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் செப். 28 முதல் அக். 26 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும். எதிர் வழித்தடத்தில் இந்த சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செப்.29- அக். 27 வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும்.

சென்னை - போத்தனூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் செப். 25 முதல் அக். 23 வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும். எதிர் வழித்தடத்தில் போத்தனூரிலிருந்து சென்னைக்கு செப். 26 முதல் அக். 24 வரை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

நாகர்கோவிலில் இருந்து சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் செப்.30 முதல் அக்.28 வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். எதிர் வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே அக்.1 முதல் அக்.29 வரை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

தூத்துக்குடி- எழும்பூர் சிறப்பு ரயில் செப். 23 முதல் அக். 23 வரை அனைத்து திங்கள்கிழமைகளிலும்இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

மேலும், நெல்லை - எழும்பூர், எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 312 இடங்கள் கூடுதலாக பயணிகளுக்கு கிடைக்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?

Southern Railway has announced that bookings for festive special trains will begin tomorrow (Sept. 17).

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக தலைவர் விஜய், திருச்சியில் செப். 13 ஆம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கியுள... மேலும் பார்க்க

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4 புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 16) திறந்து வைத்தார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.... மேலும் பார்க்க

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்... மேலும் பார்க்க

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்றுள்ளார். தில்லி சென்றடைந... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ரூரல் ஊராட்சி அடியாமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவைச் சேர்ந்த குமார் - ர... மேலும் பார்க்க

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

கூவத்தூர் நடந்தது என்ன தெரியுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் முதல்முறையாக செய்தியாளர் பேசியுள்ளார்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் ... மேலும் பார்க்க