செய்திகள் :

Pakistan: 15 வயதில் மாரடைப்பு; பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்திய குழந்தை பிரபலத்தின் மரணம்!

post image

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான உமர் ஷா என்ற சிறுவன், 15 வயதில் திடீர் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக உயிரிழந்த செய்தி, அந்நாட்டு பொழுதுபோக்கு உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் Jeeto Pakistan போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தோன்றி, பார்வையாளர்களின் இதயத்தில் இடம்பிடித்திருந்த இவர், அனைவராலும் அன்போடு நினைவுகூரப்பட்டார்.

பாகிஸ்தானின் குழந்தை பிரபலம்!

உமர் ஷாவின் குடும்பம் ஏற்கெனவே சோகத்தை சந்தித்திருந்தது. அவரின் பெரிய சகோதரர் அஹ்மத் ஷா, “Peeche Toh Dekho” என்ற பிரபல மீமின் மூலம் உலகளவில் அறியப்பட்டவர். மேலும், அவர்களது சிறிய சகோதரி ஐஷா, 2023 ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருந்தார். இந்நிலையில் உமர் ஷாவின் மரணம் அந்தக் குடும்பத்துக்கு இன்னொரு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

சம்பவம் நடந்த நாளில், உமர் திடீரென வாந்தியெடுத்து, அந்த வாந்தி நுரையீரலுக்குள் சென்று சுவாச பாதைகளை பாதித்ததாகவும், இதனால் ஆக்சிஜன் அளவு குறைந்து இதய நிறுத்தம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். இந்த சம்பவம், குடும்பத்தின் சொந்த ஊரான டேரா இஸ்மாயில் கானில் (Dera Ismail Khan) நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் இவரது மரணச் செய்தி வெளியானதும், பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். Jeeto Pakistan நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஃபஹாத் முஸ்தஃபா உட்பட பல பிரபலங்கள், இந்தச் சம்பவம் குறித்து “நம்ப முடியாதது”, “மிகவும் வேதனை தருகிறது” என்று பதிவு செய்துள்ளனர். நடிகர் வாசிம் பதாமி, மருத்துவர்களின் விளக்கத்தை பகிர்ந்து, “இது உண்மையில் தவிர்க்க முடியாத சோகமான நிகழ்வு” என்று குறிப்பிட்டார்.

மகிழ்ச்சியான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த உமர் ஷாவின் திடீர் மரணம், ரசிகர்களிடையே வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகச் சிறிய வயதிலேயே மக்களின் அன்பையும் கவனத்தையும் பெற்ற அவர், இனி நினைவாகவே வாழப்போகிறார்.

குட்டி சிம்பன்சிக்கு ரீல்ஸ் காட்டத் தடை- பூங்காவின் விநோத அறிவிப்பு; பின்னணி என்ன?

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் மொபைல் ஃபோன்களுக்கு அடிமையாகும் பழக்கம் சீனாவில் அதிகரித்து வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.ஷாங்காய் வனவிலங்கு பூங்காவில் உள்ள "டிங் டிங்" என்ற இரண்டு வய... மேலும் பார்க்க

Jwala Gutta: 30 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிய விஷ்ணு விஷால் மனைவி; குவியும் பாராட்டு!

தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க, அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகளை சில மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. அந்த வங்கிக்கு தாய்மார்கள் தங்களது குழந்தைக்குப் போக எஞ்சியிருக்கும் பாலைத் ... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: சாப்பாடு எனக் கருதி பணக்கட்டை எடுத்த குரங்கு; பணத்தில் நனைந்த மக்கள்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாஹா என்ற நகரத்தில் சாமி சிலைகள் போன்ற ஆன்மீக பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருபவர் பால்கோபால். இவர் தனது கடையில் வசூலான பணத்தை எண்ணி ... மேலும் பார்க்க

``முதுகுவலி காரணமாக விடுமுறை கேட்டவர் 10 நிமிடத்தில் மாரடைப்பால் மரணம்'' - ஊழியர்கள் அதிர்ச்சி

மனிதர்களுக்கு மாரடைப்பு எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. காலையில் நன்றாக இருப்பார்கள். திடீரென மாலையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிடுவார்கள். இப்போதெல்லாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்... மேலும் பார்க்க

Bengaluru: `தண்ணீருக்கு இந்த மாதம் ரூ.15,000' - இணையத்தில் வைரலாகும் வாட்டர் பில் - பின்னணி என்ன?

பெங்களூருவில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டு உரிமையாளர் ஒவ்வொரு மாதமும் அதிகமான தண்ணீர் கட்டணங்கள் வசூலிப்பதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, வைரலாகியுள்ளது.சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வசிக்க... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: ``அஜித் சார்கிட்ட சொல்லவேண்டியது ஒன்னு இருக்கு'' - Digital ICON மதன் கௌரி

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன். `Best Solo Creator - Male', `Be... மேலும் பார்க்க