செய்திகள் :

``முதுகுவலி காரணமாக விடுமுறை கேட்டவர் 10 நிமிடத்தில் மாரடைப்பால் மரணம்'' - ஊழியர்கள் அதிர்ச்சி

post image

மனிதர்களுக்கு மாரடைப்பு எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. காலையில் நன்றாக இருப்பார்கள். திடீரென மாலையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிடுவார்கள்.

இப்போதெல்லாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், வயது குறைவானவர்களுக்கும் கூட மாரடைப்பு வருகிறது.

இது போன்ற ஒரு நிகழ்வை கே.வி ஐயர் என்பவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில்,

காலை 8.37 மணிக்கு எனது ஊழியர் சங்கர் தனக்குக் கடுமையான முதுகுவலி இருப்பதால் தன்னால் இன்று பணிக்கு வர முடியாது என்றும், தனக்கு விடுமுறை கொடுக்கும்படியும் கேட்டு எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார்.

நானும் வழக்கமான மெசேஜ் என்று கருதி ஓகே என்று சொல்லி ஓய்வு எடுக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

ஆனால் அன்று காலை 11 மணிக்கு எனக்கு வந்த போன் அழைப்பைக் கேட்டு நான் அதிர்ச்சியாகிவிட்டேன்.

போனில் பேசிய நபர் சங்கர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். என்னால் நம்ப முடியவில்லை. உடனே மற்றொரு ஊழியருக்கு போன் செய்து அதனை உறுதிப்படுத்தினேன்.

சங்கர் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றபோது சங்கர் உயிரோடு இல்லை.

கடந்த 6 ஆண்டுகளாக என்னுடன் பணியாற்றி வந்தார். அவருக்கு 40 வயதுதான் ஆகிறது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார். மது அல்லது புகைப்பழக்கம் கூட கிடையாது.

சங்கருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனக்கு 8.37 மணிக்கு விடுமுறை கேட்டு மெசேஜ் செய்தவர் காலை 8.47 மணிக்கு இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

சடலம்

முழு சுயநினைவுடன் இருந்தவர் தனது இறுதி மூச்சுக்கு 10 நிமிடங்களுக்கு முன்பு எனக்குச் செய்தி அனுப்பினார். நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்துவிட்டேன்.

வாழ்க்கை எப்போதும் கணிக்க முடியாதது. உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் கருணை காட்டுங்கள், மகிழ்ச்சியாக வாழுங்கள், ஏனென்றால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது," என்று ஐயர் தனது பதிவை முடித்தார்.

சங்கரின் பதிவைப் பார்த்து பலரும் தங்களது கருத்துகளை எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Bengaluru: `தண்ணீருக்கு இந்த மாதம் ரூ.15,000' - இணையத்தில் வைரலாகும் வாட்டர் பில் - பின்னணி என்ன?

பெங்களூருவில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டு உரிமையாளர் ஒவ்வொரு மாதமும் அதிகமான தண்ணீர் கட்டணங்கள் வசூலிப்பதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, வைரலாகியுள்ளது.சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வசிக்க... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: ``அஜித் சார்கிட்ட சொல்லவேண்டியது ஒன்னு இருக்கு'' - Digital ICON மதன் கௌரி

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன். `Best Solo Creator - Male', `Be... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: ``100 வருட விகடனைப் போல பிளாக்ஷீப்பை உருவாக்கணும்'' - RJ விக்னேஷ்காந்த்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன்.`Best Solo Creator - Male', `Bes... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: "26 வருஷம் போராடி நீதி வென்ற கிருஷ்ணம்மாளுக்கு சமர்ப்பிக்கிறேன்!" - புஹாரி

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.`Best Solo Creator - Male', `Best Solo... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025 - ’’நம்ம ஊரு டீம் ஜெயிக்கணும்னு தான் நானும் ஆசைப்படுவேன்!’ - சாய் கிஷோர்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.`Best Solo Creator - Male', `Best Solo... மேலும் பார்க்க