செய்திகள் :

``புதிய கட்சிகளை அடக்க நினைத்தால், அவர்களின் வளர்ச்சி அதிகமாகும்; குறையாது'' - டாக்டர் கிருஷ்ணசாமி

post image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வருகிற 24-ம் தேதி இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்த கட்சி நிர்வாகிகள் மற்றும் இருக்கன்குடி ஊர் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் சாத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.

டாக்டர் கிருஷ்ணசாமி

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது.

ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அறங்காவலர்களாக இருப்பதை மாற்றி, அனைத்து ஜாதியினரும் அறங்காவலர்களாக இடம்பெற வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் 7-ஆம் மாநில மாநாட்டில் தான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

அதுவரையில் கிராமங்கள் தோறும் மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இனிக்கின்ற வாக்குறுதிகளை வழங்குகின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் அதனை கசப்பாகவே அனுபவிக்கிறார்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் மட்டுமே ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை, சர்வாதிகார ஆட்சிமுறை மற்றும் ஊழல் ஆட்சிமுறைக்கு முடிவு வரும்.

புதிய தமிழகம் கட்சி “கூட்டணி ஆட்சிதான்” என்பதில் தெளிவாக இருக்கிறது, மேலும் அதற்குத் எந்த அரசியல் கட்சி முழுமையாக உடன்படுகிறதோ, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து இணைந்து செயல்படுவதே புதிய தமிழகம் கட்சியின் நோக்கமாக இருக்கும்.

த.வெ.க. தலைவர் விஜய் இப்போதுதான் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது அவருடைய செயல்பாடுகளை ஆராய்ந்து தெளிவான முடிவு எடுப்போம். ஆனால், “கூட்டணி ஆட்சி” என்கிற விஜய்யின் கருத்தைப் புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது.

கிருஷ்ணசாமி

புதிதாக வரும் கட்சிகளைக் கட்டுப்பாடுகள் மூலம் முடக்க நினைக்கக்கூடாது. புதிதாக வரும் கட்சிகளை மீண்டும் மீண்டும் அடக்க நினைக்கும்போது, அவர்களின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும்; குறையாது என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

TVK: ``ரீல்ஸ் வேற, ரியாலிட்டி வேற; அறுந்துபோன ரீல்ஸ் என்னென்ன தெரியுமா?'' - அரியலூரில் பேசிய விஜய்

அரியலூரில் விஜய் பரப்புரைதிருச்சியில் தனது பரப்புரையை முடித்துவிட்டு அரியலூர் சென்று பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய். அந்தப் பரப்புரையில் விஜய் பேசியதாவது, "இங்கு என்னைப் பார்க்க வந்திருக்கின... மேலும் பார்க்க

TVK Vijay: ``எல்லோருக்கும் வணக்கம்!'' - திருச்சியில் பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரச்சாரத்தை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். ”உங்கள் விஜய்நா வரேன்” என்ற தலைப்பில் இந்த சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. திருச்சி மர... மேலும் பார்க்க

``என் ரசிகர் மன்றத்தில் இருந்தால் பெண் கொடுக்க போட்டி போடுவார்கள்'' - ராமராஜன் சொல்லும் காரணம்

ராமராஜன் தலைமை நற்பணி மன்றம்திரைப்பட நடிகரும் முன்னாள் அதிமுக திருச்செந்தூர் மக்களவை உறுப்பினருமான ராமராஜன், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமராஜன் தலைமை நற்பணி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்... மேலும் பார்க்க

`ஆவினில் வேலை' பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக சாத்தூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ரவீந்த... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ்; `இனி எடுபடாது' -பட்னாவிஸ் விமர்சனம்

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு, பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2005-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டியின் காரணமாக, சிவசேனாவில் இருந்து விலகிய... மேலும் பார்க்க