செய்திகள் :

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

post image

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய ஆதரவாளரான சார்லி கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, அந்நாட்டின் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலுருமான சார்லி கிர்க் (வயது 31) கடந்த செப்.10 ஆம் தேதி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டைலர் ராபின்சன் (22) என்ற இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்படத் தயாராக இருங்கள் என அமெரிக்க அரசின் செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

”அமெரிக்காவுக்கு வந்து கொலைகள், மரண தண்டனைகளைக் கொண்டாடும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கப்படக் கூடாது. ஆனால், அவர்கள் ஏற்கெனவே இங்கு இருந்தால் அவர்களது விசா ரத்து செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேட்டி விடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், அமெரிக்கா தனது குடிமக்களின் மரணத்தைக் கொண்டாடும் வெளிநாட்டவர்களை வரவேற்காது என்றும், அரசியல் பிரபலங்களின் கொலைகளைக் கொண்டாடும் நபர்கள் நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!

The United States is considering revoking the visas of foreigners who celebrate the murder of Charlie Kirk, a close supporter of President Donald Trump, Secretary of State Marco Rubio has said.

காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்! மக்கள் வெளியேற உத்தரவு!

காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. காஸா நகரத்தின் மீது, நேற்று (செப்.15) நள்ளிரவு ம... மேலும் பார்க்க

இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!

இஸ்ரேல் நாட்டில் புதியதாக 481 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தட்டம்மை பரவல் அதிகர... மேலும் பார்க்க

காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸா நகரம் எரிகின்றது என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வ... மேலும் பார்க்க

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

ஹூஸ்டன்/நியூயாா்க்: ‘அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் குடும்பத்தினா் முன் இந்திய வம்சாவளி நபா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்... மேலும் பார்க்க

ரஷிய ட்ரோன் ருமேனியாவிலும் அத்துமீறல்

புகாரெஸ்ட்: உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவின் வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து, மற்றொரு நேட்டோ நாடான போலந்தில் ரஷிய ட்ரோன்கள் அத்தும... மேலும் பார்க்க

டிக்டாக் விவகாரத்தில் உடன்பாடு: டிரம்ப் சூசகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சீன அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல... மேலும் பார்க்க