செய்திகள் :

காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

post image

இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸா நகரம் எரிகின்றது என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகின்றது. இதனால், அங்கு வசிக்கும் பாலஸ்தீன மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று (செப்.15) நள்ளிரவு முதல் தொடர் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களினால், ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், காஸா பகுதி பற்றி எரிகின்றது என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, இஸ்ரேலில் இருந்து கத்தாருக்கு செல்லும் முன்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமெரிக்க அரசின் செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், காஸா மீதான நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடங்கிவிட்டது எனவும், அதனால் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள சில நாள்கள் மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

Defense Minister Israel Katz has said that Gaza City is burning due to Israeli attacks.

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய ஆதரவாளரான சார்லி கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, அந்நாட்டின் செயலாளர் மார்கோ... மேலும் பார்க்க

இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!

இஸ்ரேல் நாட்டில் புதியதாக 481 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தட்டம்மை பரவல் அதிகர... மேலும் பார்க்க

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

ஹூஸ்டன்/நியூயாா்க்: ‘அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் குடும்பத்தினா் முன் இந்திய வம்சாவளி நபா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்... மேலும் பார்க்க

ரஷிய ட்ரோன் ருமேனியாவிலும் அத்துமீறல்

புகாரெஸ்ட்: உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவின் வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து, மற்றொரு நேட்டோ நாடான போலந்தில் ரஷிய ட்ரோன்கள் அத்தும... மேலும் பார்க்க

டிக்டாக் விவகாரத்தில் உடன்பாடு: டிரம்ப் சூசகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சீன அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல... மேலும் பார்க்க

வங்கதேசம்: 3 அமைச்சா்கள் பதவியேற்பு

காத்மாண்டு: நேபாள இடைக்கால அரசில் அமைச்சா்களாக நியமிக்கப்பட்ட மூவா் திங்கள்கிழமை பதவியேற்றனா். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் தொடா்பாக இளைஞா்களிடையே நிலவிவந்த கொந்தளிப்பு, சமூக ஊடங்களுக்கு அரசு தடைவ... மேலும் பார்க்க