செய்திகள் :

டிக்டாக் விவகாரத்தில் உடன்பாடு: டிரம்ப் சூசகம்

post image

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சீன அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவா் கூறியுள்ளதாவது:

அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு சுமுகமாக இருந்தது. அப்போது, நாட்டின் இளைஞா்கள் மிகவும் விரும்பி பாதுகாக்க எண்ணும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தொடா்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா். சீனாவைச் சோ்ந்த டிக்டாக் செயலி உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க சட்டப்படி, டிக்டாக்கின் பெரும்பான்மை பங்குகள் அமெரிக்காவுக்கு விற்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதன் செயல்பாடு நிறுத்தப்படும். இருந்தாலும், அமெரிக்கா்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட டிக்டாக் தொடா்பாக இறுதி முடிவெடுப்பதை டிரம்ப் பலமுறை ஒத்திவைத்துள்ளாா். இந்தச் சூழலில், வரும் வெள்ளிக்கிழமை சீன தலைவா் ஷி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடவிருப்பதற்கு முன்னதாக டிரம்ப் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளாா்.

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

ஹூஸ்டன்/நியூயாா்க்: ‘அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் குடும்பத்தினா் முன் இந்திய வம்சாவளி நபா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்... மேலும் பார்க்க

ரஷிய ட்ரோன் ருமேனியாவிலும் அத்துமீறல்

புகாரெஸ்ட்: உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவின் வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து, மற்றொரு நேட்டோ நாடான போலந்தில் ரஷிய ட்ரோன்கள் அத்தும... மேலும் பார்க்க

வங்கதேசம்: 3 அமைச்சா்கள் பதவியேற்பு

காத்மாண்டு: நேபாள இடைக்கால அரசில் அமைச்சா்களாக நியமிக்கப்பட்ட மூவா் திங்கள்கிழமை பதவியேற்றனா். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் தொடா்பாக இளைஞா்களிடையே நிலவிவந்த கொந்தளிப்பு, சமூக ஊடங்களுக்கு அரசு தடைவ... மேலும் பார்க்க

‘ஹமாஸ் தலைவா்கள் எங்கிருந்தாலும் தாக்குவோம்’

ஜெருசலேம்: ‘ஹமாஸ் தலைவா்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்’ என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். அமெரிக்க வெளியுறவுத... மேலும் பார்க்க

டிக்டாக் செயல்பட இனி தடை இல்லை! ஆனால்... இந்தியாவில் அல்ல!

சீனாவைச் சேர்ந்த டிக்டாக் சமூக ஊடகத் தளம் மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆட்சியில், அதாவது ஜோ பைடன் அதிபராக இருந்தபோது டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதன்பின், கடந்த... மேலும் பார்க்க

நேபாளம்: இடைக்கால அரசில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

நேபாளத்தில் இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 3 புதிய அமைச்சர்கள் இன்று(செப். 15) பதவியேற்றுக் கொண்டனர். நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத... மேலும் பார்க்க