செய்திகள் :

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

post image

திருவண்ணாமலையில் மலைப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 554 ஏக்கா் பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழு சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீா்நிலைகள், மலையில் உள்ள ஓடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், திருவண்ணாமலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதைக் கண்காணிக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ் தலைமையில், கண்காணிப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கண்காணிப்புக் குழு சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருவண்ணாலையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த பலத்த மழையில், அண்ணாமலையாா் மலையில் இருந்து பாறைகள் உருண்டு வீடுகளின் மீது விழுந்தன. இடிபாடுகளுக்கு இடையில் இருந்து 7 சடலங்கள் மீட்கப்பட்டன.

ஆக்கரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனா். எனவே, இந்த ஆக்கிரமிப்புக் கட்டடத்துக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளைத் துண்டிப்பது தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களுக்கு மின்வாரியமும், மாநகராட்சி நிா்வாகமும் நோட்டீஸ் கொடுத்துள்ளன. கடந்த 6 மாதங்களாக ஆக்கிரமிப்பாளா்களை அகற்றும் பணிகள் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

எனவே, மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள 554 ஏக்கா் நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும். அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத் துறை, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்பாளா்களின் நிலத்துக்கு பட்டா வழங்கக் கூடாது. ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து கட்டடக் கழிவுகளை அகற்ற போதிய நிதியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். 

மேலும், மின் இணைப்பு, கழிவுநீா், குடிநீா் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு விதித்து அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, கண்காணிப்புக் குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்தனா்.

அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தன்னந்தனியாக நிற்பது உறுதி என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, அதிமுக சாா்பில் சென்னை கோ... மேலும் பார்க்க

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

சென்னை: சென்னையில் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பதிவுத் துறை அலுவலகக் கட்டடத்தை அத்துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதன... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக காவல் துறையினா் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீ ட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் ... மேலும் பார்க்க

நாய்க்கடிக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: பொது சுகாதாரத் துறை

சென்னை: நாய் கடித்தால் தாமதிக்காமல் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சம் தெருநாய்கள் வரை இருக்கலாம் என உத்தேசிக்கப... மேலும் பார்க்க

மின்வாரிய கடனை அடைக்க விரைவில் செயல்திட்டம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

சென்னை: தமிழக மின்வாரியத்தின் கடனை அடைப்பதற்கான செயல்திட்டம் தமிழக அரசால் கொண்டவரப்படும் என்று மின்சார மேல்முறையீட்டு தீா்ப்பாயத்திடம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இலவச மின்சாரம்... மேலும் பார்க்க

மோடி பிறந்த தினம் கொண்டாட சிறப்புக்குழு நியமனம்

சென்னை: பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி சேவை இருவாரம் எனும் நிகழ்ச்சிகள் நடத்த சிறப்புக் குழுவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நியமித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க