செய்திகள் :

"அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை மத்தியில் இருந்தவர்கள் காப்பாற்றினர்" - இபிஎஸ்

post image

அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செப்டம்பர் 5-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார்.

அந்தக் கடைசி நாளான நேற்று, தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிலரைப் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாகக் கடுமையக்ச் சாடினார்.

அதிமுக பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி

கூட்டத்தில் தன்னுடைய உரையில் எடப்பாடி பழனிசாமி, "தருமபுரியில் இந்த மாதம் 17, 18 தேதிகளில் சுற்றுப்பயணம் வைத்திருந்தேன்.

வானிலை அறிக்கையில் மழை வருவது உறுதியானதால் அந்தத் தேதியில் அங்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல், இதே மாதம் 28, 29 தேதிகளில் தருமபுரியில் சுற்றுப்பயணம் தொடரும் என்று அறிவித்தேன்.

உடனே, மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த போகிறார் என்று செய்தி வெளியாகிறது.

அ.தி.மு.க-வை எவராலும் எதுவும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம்.

சிலபேரை கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் முடிவு கட்டப்படும்.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமா?

அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்.எல்.ஏ-க்களைக் கடத்திக் கொண்டு போனவரை கட்சியில் சேர்க்க வேண்டுமா? யாரும் என்னை மிரட்டி பார்க்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, மத்தியில் இருக்கின்றவர்கள் யாரும் எந்த அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு சில பேர் கட்சியைக் கபளீகரம் செய்து ஆட்சியைக் கவிழ்க்க பார்த்தார்கள்.

அப்போது காப்பாற்றியவர்கள் மத்தியில் இருந்தவர்கள். அ.தி.மு.க-வுக்கு எவர் துரோகம் செய்தாலும் அவர் விலாசம் இல்லாமல் போய்விடுவார்" என்று காட்டமாகப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Ind vs Pak: "ரூ.1.5 லட்சம் கோடிக்கு சூதாட்டம்; பாக்., போகும் பணம்" - சஞ்சய் ராவுத் MP சொல்வது என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று துபாயில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தத... மேலும் பார்க்க

"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடியாது"-துரை வைகோ

ம.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அண்ணாவின் 117-வது பிறந்த நாளான இன்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்ட... மேலும் பார்க்க

"காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் குடிநீர் குழாயில் காற்றுதான் வருகிறது" - விஜயபாஸ்கர் தாக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,"புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங... மேலும் பார்க்க

"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"- நயினார் விளக்கம்

"ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. 2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும்" என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.ஜி.எஸ்.டி 2.0...பூத் கமிட்டி கூட்டத... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தும் அருகதை அதிமுக-வைத் தவிர யாருக்கும் இல்லை' - ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே. புதிதாக வரும் ... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர் சொன்னால் அது வேத வாக்கு, விஜய் சொன்னால் அது..!' - பொன்னார் கூறுவது என்ன?

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முன்பு 14 வகையான வரிகள் இருந்தன. அவற்றை எளிமைப்படுத்தி ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது. இப்போ... மேலும் பார்க்க