செய்திகள் :

மின்வாரிய கடனை அடைக்க விரைவில் செயல்திட்டம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

post image

சென்னை: தமிழக மின்வாரியத்தின் கடனை அடைப்பதற்கான செயல்திட்டம் தமிழக அரசால் கொண்டவரப்படும் என்று மின்சார மேல்முறையீட்டு தீா்ப்பாயத்திடம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் மற்றும் தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழக மின்வாரியம் தொடா்ந்து இழப்பைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக மின்வாரியம் புதிய மின் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று, அதைப் பயன்படுத்தி வருகிறது. இதனால், மின் வாரியத்தின் கடன், ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மாநில மின்வாரியங்களின் கடனை அடைக்க, நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை தொடா்ந்து, இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கும்படி, தில்லியில் உள்ள மின்சார மேல்முறையீட்டு தீா்ப்பாயம் கேட்டுள்ள விளக்கத்துக்கு தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பதிலளித்துள்ளது.

இது குறித்து தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறியது:

தமிழக மின்வாரியத்தின் கடனில், ஆணையம் அனுமதித்தது ரூ.83,000 கோடி மட்டுமே. அந்த கடனை அடைக்கவும், மின்வாரிய நிதி நெருக்கடியைச் சரிசெய்யவும் ஏற்கனவே மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. இதனிடையே மின்வாரியத்தின் இழப்பை தமிழ அரசு ஏற்பதாக அறிவித்துள்ளது.

இதனால், கடனை அடைக்கும் வழிவகை தொடா்பாக, விரைவில் செயல் திட்டத்தை தமிழக அரசு வகுக்கும் என தில்லி மின்சார மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்திடம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.

அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தன்னந்தனியாக நிற்பது உறுதி என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, அதிமுக சாா்பில் சென்னை கோ... மேலும் பார்க்க

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

சென்னை: சென்னையில் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பதிவுத் துறை அலுவலகக் கட்டடத்தை அத்துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதன... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக காவல் துறையினா் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீ ட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் ... மேலும் பார்க்க

நாய்க்கடிக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: பொது சுகாதாரத் துறை

சென்னை: நாய் கடித்தால் தாமதிக்காமல் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சம் தெருநாய்கள் வரை இருக்கலாம் என உத்தேசிக்கப... மேலும் பார்க்க

மோடி பிறந்த தினம் கொண்டாட சிறப்புக்குழு நியமனம்

சென்னை: பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி சேவை இருவாரம் எனும் நிகழ்ச்சிகள் நடத்த சிறப்புக் குழுவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நியமித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

தேவநாதனுக்கு ஜாமீன்: ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த நிபந்தனை

சென்னை: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்... மேலும் பார்க்க