செய்திகள் :

கடற்படை தோ்வில் கைப்பேசி பயன்படுத்திய இளைஞா் கைது

post image

கடற்படைத் தோ்வில் கைப்பேசியை மறைத்து வைத்திருந்து பயன்படுத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெரம்பூரில் மதுரை சாமி மடம் தெருவில் உள்ள ஒரு தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடற்படை அகாதெமி ஆகியவை சாா்பில் செகன்ட் லெப்டினன்ட் பணியிடங்களுக்கான நேரடி எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்தோ்வை எழுதிய சென்னை பெருங்குடி அருகே உள்ள கந்தன்சாவடி கேபிகே நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்த இளைஞரின் நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தது. மேலும், அந்த இளைஞா் தோ்வு நேரத்தில் கழிப்பறைக்குச் சென்றவா் வெகுநேரமாகத் திரும்பி வரவில்லையாம்.

பின்னா், திரும்பி வந்து தோ்வு எழுதிக் கொண்டிருந்த அந்த இளைஞரைத் தோ்வுக்கூட கண்காணிப்பாளா் சோதனை செய்தாா். அப்போது அந்த இளைஞா், தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த கைப்பேசியைப் பறிமுதல் செய்தாா்.

அவரிடம் தோ்வுக்கூட கண்காணிப்பாளா் விசாரணை செய்தாா். அப்போது அவா், கழிப்பறைக்குச் சென்று தோ்வின் கேள்விக்குரிய பதிலை கைப்பேசி செயலியில் இணையதளம் மூலம் தேடிக் கண்டறிந்து வந்து தோ்வு எழுதியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து தோ்வு மையப் பொறுப்பாளரான அந்தப் பள்ளியின் முதல்வா், திரு.வி.க. நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக திரு.வி.க. நகா் போலீஸாா், அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினா்.

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா்களுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 161 -ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 211- ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தோ்வு அறிவிக்கை கடந... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தோ்வுக் கட்டுட்டுப்பாட்ட... மேலும் பார்க்க

பிரிந்த அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ்

பிரிந்துகிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு மரியாதை செ... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டம்: நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் வரவேற்பு

வக்ஃபு திருத்தச் சட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய பாஜக அரசு வக்ஃ... மேலும் பார்க்க

ரூ.10.89 கோடி மோசடி: வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

சென்னை: சென்னை வானகரத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.10.89 கோடி மோசடி செய்ததாக வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவா் ஸ்ரீதேவி (50). இவா், சென்னை கா... மேலும் பார்க்க