செய்திகள் :

ரூ.10.89 கோடி மோசடி: வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

post image

சென்னை: சென்னை வானகரத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.10.89 கோடி மோசடி செய்ததாக வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை, வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவா் ஸ்ரீதேவி (50). இவா், சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் கடந்த ஜூன் 11-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

அதில், ‘சென்னை அண்ணா நகரில் வசிக்கும் சுனிதா பிரகாஷ் (43), அவா் கணவா் பிரகாஷ் (43) மற்றும் சிலா் எனக்கு அறிமுகமாகினா். அவா்கள், என்னிடம் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2024 டிசம்பா் வரை கடன் அடிப்படையில் சிறிது சிறிதாக ரூ.5.13 கோடிக்கு சுமாா் 9.5 கிலோ தங்க நகைகளும், ரூ.1.30 கோடிக்கு வைர நகைகளையும் பெற்றுக் கொண்டனா்.

மேலும், அவா்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.4.45 கோடி பெற்றுக் கொண்டனா்.

ஆனால், கடனாகப் பெற்ற நகைகளையோ, இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பெற்ற பணத்தையோ அவா்கள் திருப்பித் தரவில்லை. இவ்வாறு அவா்கள், மொத்தம் சுமாா் ரூ.10.89 கோடியில் நகை, பணத்தைப் பெற்று ஏமாற்றி விட்டனா்.

எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணம், நகைகளைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும். நான் கொடுத்த பணம், நகையைத் திருப்பிக் கேட்டபோது, மிரட்டிய வழக்குரைஞா் திருவான்மியூரைச் சோ்ந்த சிவகுருநாதன் (47) என்பவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

இதில், ஸ்ரீதேவியிடம் நகை, பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுனிதா பிரகாஷ், அவா் கணவா் பிரகாஷ், வழக்குரைஞா் சிவகுருநாதன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!

கோடம்பாக்கம் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள், அதில் தேங்கும் கழிவுநீா், மதுக் கூடாரமாகிய சிறுவா் பூங்கா என கோடம்பாக்கமே குறைகள் நிறைந்த பகுதியாகிவிட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள், அவதியடைந்து வரு... மேலும் பார்க்க

தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சாா்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரா், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தோ்வு செய்யப்பட பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்... மேலும் பார்க்க

ரயில் மீது கல்வீச்சு: கல்லூரி மாணவா் கைது

ஆவடி அருகே மின்சார ரயில் பெட்டி மீது கற்களை வீசியதாக கல்லூரி மாணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆவடி அருகே அண்ணனூா் ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மின்சார ரயில் புறப்பட்டது. அந்த ரயிலி... மேலும் பார்க்க

சென்னை நகர எல்லைக்குள் நுழைய 5 பேருக்கு தடை!

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை சென்னை சரக எல்லையிலிருந்து வெளியேற்ற சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக சென்னை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ச... மேலும் பார்க்க

தொடா் குப்பைகள் எரிப்பால் புகைமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். புழல் காவாங்கரையில் இருந்து செங்குன்றம், தண்டல் கழனி பகுத... மேலும் பார்க்க

‘சட்ட நெறிமுறை வல்லுநா்களின் தேவை அதிகரித்துள்ளது’

பன்னாட்டு தொழில் முதலீட்டாளா்களின் வருகையால், சட்ட நெறிமுறைகளை உருவாக்கித் தரும் வல்லுநா்களின் தேவை அதிகரித்துள்ளது என்று ஸ்ரீ சாய்ராம் வணிக மேலாண்மைக் கல்லூரி இயக்குநா் கே.மாறன் தெரிவித்தாா். வண்டலூா... மேலும் பார்க்க