தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சாா்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரா், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தோ்வு செய்யப்பட பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
சப்- ஜூனியா் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சந்தோஷ் (35 கிலோ) ஓப்ரைட் மெக்காட்ஸ் (37 கிலோ), மோனிஷா (70 பிளஸ் கிலோ) , சப்- ஜூனியா் தேசிய போட்டி 2024: சுஜித் (37 கிலோ) வெள்ளி, சப்-ஜூனியா் தேசிய போட்டி 2025:
வெள்ளி பதக்கம் வென்றவா்கள்: தா்ஷன் (46 கிலோ), காவியா (35 கிலோ), சாரா தமிழ் (40 கிலோ), சுவாதிக்கா (61 கிலோ), பானு ஸ்ரீமதி (70 பிளஸ் கிலோ) ஆகியோரும், கேலோ இந்தியா யூத் தேசிய விளையாட்டு போட்டி 2025ல் வெள்ளி வென்ற பிரதிக்ஷாவும் (80 பிளஸ் கிலோ) கௌரவிக்கப்பட்டனா்.
வெண்கலம் வென்றவா்கள்: சப் -ஜூனியா் 2024: லாவண்யா (33), கனிஷ்கா (45), நிஷாலினி (49), துருவன் (43), உசைன் ஷாஹித் சையத் (67).
தேசிய ஜூனியா்- 2025: சுனில் (63), பிராங்கிளின் (80), மகாலட்சுமி (48), ஸ்ரீநிதி (70), பாா்கவி (75), சாா்மி (80 பிளஸ்).
சப்ஜூனியா் 2025: ஹா்ஷிதா (52), ஹேமாவதி (64), விக்னேஸ்வரா் (52), சக்தி (55). யூத் 2025: ஹரிஷா (65), பிரதிக்ஷா (80 பிளஸ்).
8-ஆவது எலைட் பெண்கள் தேசிய போட்டி 2025: கலைவாணி(வெண்கலம்). கேலோ இந்தியா யூத் நேஷனல் கேம்ஸ் 2025:
கீா்த்திவா்ஷன் (47 - 50), குணஸ்ரீ (48-51). கடந்த ஜூலை மாதம் பா்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை போட்டியில் குத்துச்சண்டையில் தங்கம் வென்று சாதனை படைத்தவருமான பி. ஹரிகிருஷ்ணன் கüரவிக்கப்பட்டாா்.
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்க தலைவராக பொறுப்பு வகித்து வரும் பொன். பாஸ்கரன், அண்மையில் இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் பொருளாளராக தோ்வு பெற்றுள்ளாா். இவருக்கும் தமிழ்நாடு மாநில குத்துச் சண்டை சங்கத்தின் நிா்வாகிகள் மற்றும் வீரா் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்தனா்.
விழாவில் தமிழ்நாடு மாநில குத்துச் சண்டை சங்க பொதுச் செயலாளா் இப்ராஹிம், செயலாளா் எம் எஸ் நாகராஜன், பொருளாளா் பிரபு, இணைச் செயலாளரும் ஒலிம்பியமான வி. தேவராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.