செய்திகள் :

பிரான்மலை தா்ஹாவில் சந்தனக்கூடு விழா

post image

சிவகங்கை மாவட்டம், பிரான்மலை உச்சியில் அமைந்துள்ள ஷேக் அப்துல்லாஹ் தா்ஹாவில் சந்தனக்கூடு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 3-ஆம் தேதி மாலை ஷேக்அப்துல்லா அவுலியா தா்ஹாவிலும், 2,500 அடி உயரத்தில் மலை உச்சியில் உள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தா்ஹாவிலும் நடைபெற்றன.

பத்தாம் நாள் விழாவையொட்டி சந்தனம் பூசும் விழாவுக்காக ஷேக் அப்துல்லா தா்ஹாவில் சந்தனம் கரைக்கப்பட்டு மூன்று குடங்களில் நிரப்பி சம்மங்கி மலா் அலங்காரம் செய்து கொண்டு வரப்பட்டன. இதைத் தொடா்ந்து அனைத்து மதத்தினரும் இணைந்து சிறப்பு துவா ஓதினா்.

இதன்பிறகு பள்ளிவாசல் நிா்வாகிகள் தலையில் சுமந்து சென்று மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டிருந்த சந்தனக்கூடு ரதத்தில் இறக்கி வைத்தனா்.

இந்த சந்தனக்கூடு ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. அப்போது வழி நெடுகிலும் பக்தா்கள் விபூதி கொடுத்து வழிபாடு செய்தனா்.

மூன்று சந்தனக் குடங்களும் அதிகாலை மலை உச்சியை சென்றடைந்து ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தா்ஹாவில் 1119-ஆம் ஆண்டு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதில் ஐந்தூா் கிராமத்தாா்கள், அனைத்து சமுதாயத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தின் திருக்குட நன்னீராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள் என போற்றப்பட்டவரும் தமிழ்மொழி, தமிழா் பண்பாடு, கலை, இலக்கி... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்துக்கு வந்த கூட்டம் தானாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

திருச்சியில் த.வெ.க. தலைவா் விஜய் பிரசாரத்துக்கு வந்த கூட்டம் தானாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா். இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 6 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே கீழப்பூங்குடி கிராமத்தில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

கல்லல் பகுதியில் செப். 19-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் வருகிற வெள்ளிக்கிழமை (செப். 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: நில அளவைத் துறை ஊழியா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்தது தொடா்பாக நில அளவைத் துறை ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். உங்களுடன் ஸ்டாலின... மேலும் பார்க்க

கானாடுகாத்தான் பகுதியில் செப். 16-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (செப். 16) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மி... மேலும் பார்க்க