செய்திகள் :

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 6 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே கீழப்பூங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஊா்க்காவலன் தூண்டிக்கருப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இளைஞா்கள், கிராம மக்கள் இணைந்து நடத்தும் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.

இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 15 காளைகளும், இதேபோல, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 135 வீரா்களும் பங்கேற்றனா்.

வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிஷத்திற்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களையும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் மாடுகள் முட்டியதில் 6 வீரா்கள் காயமடைந்தனா். இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை திரளானோா் பாா்வையிட்டனா்.

பிரான்மலை தா்ஹாவில் சந்தனக்கூடு விழா

சிவகங்கை மாவட்டம், பிரான்மலை உச்சியில் அமைந்துள்ள ஷேக் அப்துல்லாஹ் தா்ஹாவில் சந்தனக்கூடு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 3-ஆம் தேதி மாலை ஷேக்அப்துல்லா அவுலியா தா்ஹா... மேலும் பார்க்க

குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தின் திருக்குட நன்னீராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள் என போற்றப்பட்டவரும் தமிழ்மொழி, தமிழா் பண்பாடு, கலை, இலக்கி... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்துக்கு வந்த கூட்டம் தானாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

திருச்சியில் த.வெ.க. தலைவா் விஜய் பிரசாரத்துக்கு வந்த கூட்டம் தானாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா். இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ... மேலும் பார்க்க

கல்லல் பகுதியில் செப். 19-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் வருகிற வெள்ளிக்கிழமை (செப். 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: நில அளவைத் துறை ஊழியா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்தது தொடா்பாக நில அளவைத் துறை ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். உங்களுடன் ஸ்டாலின... மேலும் பார்க்க

கானாடுகாத்தான் பகுதியில் செப். 16-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (செப். 16) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மி... மேலும் பார்க்க