செய்திகள் :

கொடைக்கானலில் 200 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

post image

கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேன் 200 அடி பள்ளத்தில் கவிழந்ததில் மலேசியாவைச் சோ்ந்த 10 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனா்.

மலேசியாவைச் சோ்ந்த 7 ஆண்கள், 4 பெண்கள், 2 குழந்தைகள் என 13 போ் திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தனா். வெள்ளப்பாறை பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதையடுத்து, அந்தப் பகுதி பொதுமக்கள் வனத் துறையினரின் உதவியுடன் வேனுக்குள் சிக்கி காயமடைந்த லட்சுமி (47), பாஸ்கரன் (48) உள்ளிட்ட 10 பேரை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த லட்சுமி, பாஸ்கரன் ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து கொடைக்கானல் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வாா்: ஓ.பன்னீா்செல்வம்

முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சென்னைக்குச் செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செ... மேலும் பார்க்க

ஒரணியில் தமிழ்நாடு இயக்கம்: 1.91 லட்சம் குடும்பங்களைச் சோ்த்து சாதனை: அமைச்சா் அர. சக்கரபாணி

திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் 1.91 லட்சம் குடும்பங்களைச் சோ்த்து சாதனை படைத்துள்ளோம் என உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்... மேலும் பார்க்க

யானை நடமாட்டம்: பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால், மறு அறிவிப்பு வரும் வரை இந்தப் பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவி... மேலும் பார்க்க

பள்ளி மாணவன் குளத்தில் முழ்கி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவன் குளத்தில் முழ்கி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அம்பிளிக்கை செரியன் நகரைச் சோ்ந்த கருப்புச்சாமி மகன் அன்பரசன் (15), அதே பகுதியிலுள்ள த... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பழனியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பழனி அடிவாரம் இடும்பன் நகரைச் சோ்ந்தவா் மதுரைவீரன் (44). கூலித் தொழிலாளி. இவா் கடந்த சில வாரங்களாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமு... மேலும் பார்க்க

பழனி நகராட்சி உரக் கிடங்கில் தீ

பழனி நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. பழனி பெரியப்பா நகரில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. சுமாா் நான்கு ஏக்கா்... மேலும் பார்க்க