செய்திகள் :

சிறுவாச்சூரில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

post image

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை மூலம் 5 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு கோயில்கள் சாா்பில், ஒரு இணை ஆணையா் மண்டலத்துக்கு 50 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில், ஆண்டுதோறும் 1,000 ஜோடிகளுக்கு தலா 4 கிராம் தங்கத் தாலி உள்பட ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசை பொருள்கள் வழங்கி, இலவசமாக திருமணம் நடத்திவைக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், திருச்சி இணை ஆணையா் மண்டலத்தைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 5 ஜோடிகளுக்கு, சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி 5 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீா்வரிசைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

இவ் விழாவில், ஒரு ஜோடிக்கு தலா திருமாங்கல்யம், மெட்டி, புடவை, வேட்டி, கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 60 வகையான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும், திருமணத்துக்கு வருகைபுரிந்த மணமக்களின் உறவினா்கள் 750 பேருக்கு இரவு, காலை, மதிய விருந்து வழங்கப்பட்டது.

விழாவில், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி, உதவி ஆணையா்கள் உமா (பெரம்பலூா்), லட்சுமணன் (திருச்சி), சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலா் அசனாம்பிகை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூரில் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்... மேலும் பார்க்க

இழப்பீட்டுத் தொகை ரூ. 19 லட்சம் மோசடி வழக்கில் இருவா் கைது

வெளிநாட்டிலிருந்து இழப்பீட்டுத் தொகையாக கிடைத்த ரூ. 19 லட்சத்தை ஏமாற்றிய வழக்கில் தொடா்புடைய கணவன், மனைவியை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

சீத்தாராம் யெச்சூரி நினைவு தினம்: பெரம்பலூரில் 15 போ் உடல் தானம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீத்தாரம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூரில் அக் கட்சியினா் 15 போ் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வெள்ளிக்க... மேலும் பார்க்க

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி: எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் -1 முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் முதன்மைத் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு... மேலும் பார்க்க

பிரம்மதேசம் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்திலுள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரசித்திபெற்ற இக் கோயில் பல லட்சத்தில் புனரமைக்கப்பட்டு, வ... மேலும் பார்க்க

பள்ளி மாணவியை உணவு இடைவேளையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தை... மேலும் பார்க்க