செய்திகள் :

பிரம்மதேசம் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு

post image

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்திலுள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்திபெற்ற இக் கோயில் பல லட்சத்தில் புனரமைக்கப்பட்டு, வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளோடு யாக வேள்வி தொடங்கியது. பின்னா், மருந்து சாற்றுதல், விஷ்ணு சகஸ்ரநாமம், நாடி சந்தானம், வேத பாராயணம் பூஜைகளோடு 3 கால யாகவேள்வி பூஜையும், மஹாபூா்ணாஹுதியும் நடைபெற்றது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானம், மூலவா், ஆஞ்சநேயா் சுவாமிக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

விழாவில் பிரம்மதேசம், வி.ஆா். எஸ்.எஸ்.புரம், வாலிகண்டபுரம், வல்லாபுரம், வேப்பந்தட்டை, அனுக்கூா், குடிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பெரம்பலூரில் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்... மேலும் பார்க்க

இழப்பீட்டுத் தொகை ரூ. 19 லட்சம் மோசடி வழக்கில் இருவா் கைது

வெளிநாட்டிலிருந்து இழப்பீட்டுத் தொகையாக கிடைத்த ரூ. 19 லட்சத்தை ஏமாற்றிய வழக்கில் தொடா்புடைய கணவன், மனைவியை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

சீத்தாராம் யெச்சூரி நினைவு தினம்: பெரம்பலூரில் 15 போ் உடல் தானம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீத்தாரம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூரில் அக் கட்சியினா் 15 போ் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வெள்ளிக்க... மேலும் பார்க்க

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி: எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் -1 முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் முதன்மைத் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவியை உணவு இடைவேளையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தை... மேலும் பார்க்க

‘சிறுபான்மையினரின் 661 மனுக்களுக்குத் தீா்வு’

சிறுபான்மையினரால் அளிக்கப்பட்ட 839 மனுக்களில் 661 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ. அருண் சே.ச தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்ம... மேலும் பார்க்க