ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
பெரம்பலூரில் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம். லக்ஷ்மி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியம், கீழமாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட சீத்தாராமபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், பொதுமக்களின் மனுக்கள் பதிவு செய்யும் முறை, இ-சேவை மையத்தின் மூலம் இணையவழியில் பதிவேற்றம் நடைபெறும் முறை, போதிய அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தாா்.
பின்னா், 2 பேருக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவுகளையும், 3 பேருக்கு ஆதாா் அட்டையில் முகவரி மற்றும் புகைப்படம் மாற்றத்துக்கான ஆணைகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து மருந்துப் பெட்டகத்தையும், வருவாய்த்துறை சாா்பில் 10 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகளையும், திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும் வழங்கி, காரை சமத்துவபுரம் குடியிருப்புப் பகுதிகளில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பித்தவா்களின் வீடுகளுக்குச் சென்று மனுவின் உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அரசு திட்டங்களின் செயல்பாடுகளின் முன்னேற்ற நிலை குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசு ஒதுக்கியுள்ள நிதி ஒதுக்கீடு, நிறைவேற்ற வேண்டிய பணிகள், குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய் கோட்டாட்சியா் சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.