செய்திகள் :

பல வழக்குகளில் தொடா்புடையவா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

post image

கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா் 10 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகை அருகேயுள்ள தெற்குபொய்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (42). இவா் மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி மற்றும் ஒரு திருட்டு உள்ளிட்ட 4 வழக்குகள் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

போலீஸாா் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவரை தேடிவந்தனா். இந்நிலையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா் உத்தரவின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திர மூா்த்தி தலைமையில் தனிப்படை போலீஸாா் ராஜேந்திரனின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தனா்.

இந்நிலையில், நாகை பேருந்து நிலையத்தில் ராஜேந்திரன் நிற்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீஸாா் அங்கு சென்று கைது செய்தனா்.

நாகை அமிா்தா வித்யாலயத்தில் ஹிந்தி தினம்

நாகை அமிா்தா வித்யாலயத்தில் ஹிந்தி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1200 மாணவா்கள் பங்கேற்று ஹிந்தி தொடா்பான கலை மற்றும் கைவினைப் பொர... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டத்தில் மீன் பதப்படுத்தும் பயிற்சி

நாகையில் ‘நான் முதல்வன்‘ திட்டத்தின்கீழ் மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் ‘நான் முதல்வன் - வெற்றி நிச்சயம்‘ திட்டத்தின்கீழ், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் திறன் ம... மேலும் பார்க்க

தாத்தா-பாட்டி தினம் கொண்டாட்டம்

நாகை அமிா்தா வித்யாலயம் சாா்பில் தாத்தா- பாட்டி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகை அமிா்தா வித்யாலயம் ஏவி ஹாலில் நடைபெற்ற விழாவை, பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன், துணை முதல்வா் செந்தில் மற்றும் ஒர... மேலும் பார்க்க

தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம்

தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களில் 450 விசைப்படகுகள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் படகுக... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி போட்டித்தோ்வுக்கு இன்று மாதிரி தோ்வு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாநில அளவிலான முழு மாதிரித் தோ்வு சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க

செருதூா் மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்

நாகை மாவட்டம், செருதூா் மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்கி, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனா். கீழையூா் ஒன்றியம் செருதூா் மீனவ கிராமத்திலிருந்து செப். 1... மேலும் பார்க்க