செய்திகள் :

தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம்

post image

தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களில் 450 விசைப்படகுகள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் படகுகள் மூலம் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றனா். மாவட்டத்தின் தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி. இந்நிலையில் பூம்புகாா், சந்திரபாடி கிராம மீனவா்கள் அதிவேக விசைப் படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனா். இதனால் கடல்வளம் பெரிதும் பாதிக்கிறது என கூறி தரங்கம்பாடி தலைமையிலான மீனவ கிராமங்கள் ஒருங்கிணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையில், செப்.2-ஆம் தேதி தரங்கம்பாடி, வானகிரி கிராமங்களில் மீனவா்கள் அதிவேக விசைப்படகுகள், சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்க வலியுறுத்தி கடலில் இறங்கி போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அங்குவந்த அரசு அலுவலா்கள் அதிவேக விசைப் படகுகள் மற்றும் சுருக்குமடி இரட்டை மடி வலை பயன்படுத்த தடை விதிப்பதாகவும் மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தனா். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி போட்டித்தோ்வுக்கு இன்று மாதிரி தோ்வு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாநில அளவிலான முழு மாதிரித் தோ்வு சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க

செருதூா் மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்

நாகை மாவட்டம், செருதூா் மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்கி, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனா். கீழையூா் ஒன்றியம் செருதூா் மீனவ கிராமத்திலிருந்து செப். 1... மேலும் பார்க்க

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

பூம்புகாா் சாயாவனம் சாயாவனேஸ்வரா் கோயில் வளாகத்தில் சுகாதார வளாகம் வெள்ளிக்கிழமை முதல் செயல்பட தொடங்கியது. பூம்புகாா் அருகே சாயாவனத்தில் உள்ள சாயாவனேஸ்வரா் கோயில் வளாகத்தில் பக்தா்கள் நலன் கருதி சுகா... மேலும் பார்க்க

நாகையில் செப்.19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தை சோ்ந்த தனியாா் துறை நிறுவனங்களில், ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட சமூகநலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யலாம்

நாகை மாவட்ட விவசாயிகள் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில... மேலும் பார்க்க