செய்திகள் :

இந்தியப் பெண்ணை மணந்த கொரிய இளைஞர்; ரூ.1.26 லட்சம் கர்ப்ப கால உதவித்தொகை வழங்கிய கொரிய அரசு

post image

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை மணந்த கொரிய இளைஞர் திருமணம் செய்தார். அந்தத் தம்பதிக்கு, கர்ப்ப காலத்திற்கான நிதி உதவியாக ரூ.1.26 லட்சம் வழங்கியுள்ளது கொரியா அரசு. வெளிநாட்டுப் பெண்ணை மணந்தாலும், அந்நாட்டுக் குடிமகனாகியதால் சமூக நலத் திட்டத்தில் அவர்களுக்கும் இத்தகைய நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு குழந்தை பெற்றெடுத்ததற்காக அந்த நாட்டு அரசாங்கத்திடமிருந்து 1.26 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

கொரியாவில் கர்ப்பமாக இருப்பதற்கு தனக்கு உதவித்தொகை கிடைப்பதாக அவர் சமூக ஊடகத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

pregnancy

அவர் வெளியிட்ட வீடியோவின்படி, கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் பரிசோதனை, மருத்துவச் செலவு உட்பட இந்திய ரூபாய்க்கு 63,100 ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் கர்ப்ப காலத்தில் பொதுப் போக்குவரத்து செலவுக்காக அந்தப் பெண்ணுக்கு 46,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கொரிய அரசாங்கம் அந்தத் தம்பதியினருக்கு ஒரு குழந்தை பெற்ற பிறகு மொத்தம் 1.26 லட்சம் வழங்கியிருக்கிறது.

டெலிவரிக்கான வாழ்த்துத் தொகை என்று அழைக்கப்படும் அந்த அதிகாரப்பூர்வ நிதி அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

இதுபோக குழந்தையின் முதல் வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் பணம் அளிக்கப்பட்டு வந்ததாக அந்தப் பெண் கூறுகிறார்.

35 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி மற்றும் மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.

அதன்படி அவருக்கு இந்த நிதியும் வழங்கப்பட்டிருக்கிறது. பலரும் தென்கொரியாவின் மகப்பேறு திட்டத்தைப் பாராட்டி வருகின்றனர்.

கர்ப்பிணி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

`மெக்டொனால்டில் பாத்திரம் கழுவி முதல் சம்பளம் வாங்கினேன்' - பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்மிருதி இரானி

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிவியில் நடிக்க வந்திருக்கிறார். அவர் தற்போது கியுங்கி சாஸ் பி கபி பஹு தி சீசன் 2ல் நடித்து வருகிறார். அவர் ராகுல் காந்தியை எதிர்... மேலும் பார்க்க

`டாய்லெட் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறியது எப்படி?' - செல்ஃபி எடுக்கும் சீன மக்கள் சொல்வதென்ன?

சீனாவில் புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறை தற்போது சுற்றுலாத்தலமாக மாறி இருக்கிறது. கழிப்பறை எப்படி சுற்றுலா தளமாக மாறும் என்று பலரும் யோசிக்கலாம்.ஆனால், கழிப்பறையாக இருந்தாலும் அது கலை நயத்துடன் அலங்கர... மேலும் பார்க்க

`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்சய் தத்!

மும்பையில் பாலிவுட் ரெஸ்டாரண்ட்ஸ் மும்பையில் பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் உப தொழிலாக ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகின்றனர். இதில் ஷாருக்கான் மனைவி கெளரி கான், நடிகை ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், இய... மேலும் பார்க்க

`இரவு 7 முதல் காலை 6 வரை வேலை செய்யலாம்..'- பெண்கள் நைட்ஷிஃப்ட் பணியாற்ற குஜராத்தில் சட்டத்திருத்தம்

குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற ஏதுவாக தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

சஞ்சய் கபூர் ₹30,000 கோடி சொத்து: உயில் குறித்து பிரியா சச்சிதேவ், கரிஷ்மா பிள்ளைகள் வாக்குவாதம்

சஞ்சய் கபூர் விவாகரத்துடெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு லண்டனில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் இருந்தனர். அதில் ... மேலும் பார்க்க

சிவகாசி: '10 பைசா பிரியாணி' - Youtuber-ன் அறிவிப்பால் குவிந்த கூட்டம்; ஏமாற்றத்தோடு திரும்பிய சோகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல யூடியூபருடைய உணவகத்தின் கிளை திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 10 பைசா நாணயத்தை முதலில் கொண்டு வரும் 200 பேருக்கு சிக்கன் பிரியாணி, இரண்டு பி... மேலும் பார்க்க