செய்திகள் :

விநாயகா் சிலை ஊா்வலத்தில் 9 போ் பலி: பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்

post image

புது தில்லி: கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்திருப்பதுடன் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளையொட்டி, கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டம் மொசலே ஹொசஹள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஒரு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் வேனின் சக்கரத்துக்கு அடியில் சிக்கி 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 24 போ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 5 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். உயிரிழந்தோரில் எட்டு பேர் 17-25 வயதுக்குட்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட ஒருவர். 6 பேர் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் பொறியியல் மாணவா்களாவா்.

இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து மாநில முதல்வா் சித்தராமையா, ‘விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவா்களுக்கான சிகிச்சை கட்டணத்தை மாநில அரசே ஏற்கும்’ என்றாா்.

இந்நிலையில், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்திருப்பதுடன் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ கர்நாடகம் மாநிலம் ஹசன் மாவட்டத்தில் விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் மனதை வருத்தமடைய செய்துள்ளது. இந்த துயரமான நேரத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

Prime Minister Narendra Modi on Saturday condoled the death of nine people, and injuries to multiple others in Karnataka's Hassan after a truck lorry crashed into a Ganpati procession.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் ... மேலும் பார்க்க

மோடியின் மணிப்பூர் பயணம் "கேலிக்கூத்தானது": ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

புது தில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் பயணம் என்பது "கேலிக்கூத்தானது" என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை விமர்சினம் செய்துள்ளார். இது "அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ச... மேலும் பார்க்க

கொள்கையில்லாமல் கூக்குரலிட்டு, கும்மாளம் போடும் கூட்டமல்ல திமுக! மு.க. ஸ்டாலின் கடிதம் - முழுமையாக...

முப்பெரும் விழாவாக -உடன்பிறப்புகளின் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார... மேலும் பார்க்க

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு!

இம்பால்: மணிப்பூருக்கு சனிக்கிழமை (செப்.13) பிரதமா் நரேந்திர மோடியின் முன்னிட்டு மணிப்பூரின் இம்பாலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரை வரவேற்பதற்காக நகரம் முழுவதும் அலங்கரிக்கப்ப... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமானதாக அதிகாரி... மேலும் பார்க்க