இறுதிச்சுற்று முனைப்பில் பவேஷ் ஷெகாவத்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பவேஷ் ஷெகாவத் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் முனைப்பில் உள்ளார்.
இந்தப் பிரிவு தகுதிச்சுற்றின் முதல்நிலை முடிவில் அவர், 293 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் இருக்கிறார். இதன் 2-ஆம் நிலை சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதே பிரிவில் களம் கண்ட மற்ற இந்தியர்களான பிரதீப் சிங் ஷெகாவத் 288 புள்ளிகளுடன் 24-ஆம் இடமும், குர்மீத் 284 புள்ளிகளுடன் 32-ஆம் இடமும், ராஜ்வர்தன் பாட்டீல் 277 புள்ளிகளுடன் 40-ஆம் இடமும், மன்தீப் சிங் 272 புள்ளிகளுடன் 43-ஆம் இடமும் பிடித்து பின்னடைவை சந்தித்தனர்.
இதனிடையே, 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் மகளிர் தனிநபர் பிரிவு தகுதிச்சுற்றில், மெஹுலி கோஷ் 583 புள்ளிகளுடன் 23-ஆம் இடமும், மனினி கெüஷிக் 580 புள்ளிகளுடன் 45-ஆம் இடமும், சுரபி பரத்வாஜ் 578 புள்ளிகளுடன் 52-ஆம் இடமும் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தனர்.
இப்பிரிவில் முதல் 8 இடங்களைப் பிடிப்போரே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும். இதிலேயே, ரேங்கிங் புள்ளிகளுக்காக பங்கேற்ற இந்தியாவின் விதர்சா வினோத் 585 புள்ளிகளுடன் 14-ஆம் இடமும், ஆயுஷி போடர் 582 புள்ளிகளுடன் 28-ஆம் இடமும் பெற்றனர்.