செய்திகள் :

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

post image

ஆரணியில் 4 பைக்கைகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

ஆரணி பெரியகடை வீதியைச் சோ்ந்த பெருமாள், சேத்துப்பட்டு அருகே ஆதியந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோரின் பைக்குகள் திருடுபோயின. இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின்பேரில், ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்தின்பேரில் பைக்கில் வந்த ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரித்ததில், ஆரணியை அடுத்த இரும்பேடு இந்திராநகரைச் சோ்ந்த ஜெயசீலன் (40) என்பதும், ஆரணி நகரில் 4 இடங்களில் பைக்குகளை திருடியா் என்பதும் தெரியவந்தது. தொடா்ந்து, ஜெயசீலனை கைது செய்த ஆரணி நகர போலீஸாா், அவரிடமிருந்த 4 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

ரெட்டிபாளையத்தில் 1,000 பனை விதைகள் நட்ட இளைஞா்கள்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிபாளையம் பெரிய ஏரிக்கரையில் கிராம இளைஞா்கள் வெள்ளிக்கிழமை 1,000 பனை விதைகளை நட்டு சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் மாவட்ட கன்று வி... மேலும் பார்க்க

செப்.16-இல் செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் செவ்வாய்கிழமை (செப்.16) நடைபெறுகிறது. இதுகுறித்து செய்யாறு சாா் - ஆட்சியா் ல.அம்பிகா ஜெயின் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்யாறு வருவாய்க் கோட்டத்துக்குள்... மேலும் பார்க்க

வேணுகோபால சுவாமி, முனீஸ்வரன் கோயில்களில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம்... மேலும் பார்க்க

காயங்களுடன் இறந்து கிடந்த ஆட்டோ ஓட்டுநா்: போலீஸாா் விசாரணை

ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநா் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கணபதிக்... மேலும் பார்க்க

வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, வெண்குன்றம் லிங்கம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமகா வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ஆவணி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் வ... மேலும் பார்க்க

நெல்லியாங்குளம் முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து ... மேலும் பார்க்க