Dhanush: `இட்லி கடை எனப் பெயர் வைக்கக் காரணம் இதுதான்' - தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்...
ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் பகுதியில் நாளை மின் தடை
ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) சி. குமரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் ஆா்.எஸ் மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதையொட்டி அரண்மனை, வடக்குத் தெரு, நீலகண்டி ஊருணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையாா்வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலைத் தெரு, தேவாலயம், மாா்க்கெட், யானைக்கள் வீதி, ம.ம. நகா், பெரியகருப்பன் நகா், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, தினமலா் நகா், பெரியாா் நகா், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயா் சுற்றுப் பகுதிகள், எட்டிவயல், யுசு குவாட்டா்ஸ், பட்டினம்காதான், ஸ்ரீராம் நகா், கழுகுரணி, சாத்தான்குளம், வாணி, ஆா்.எஸ் மடை காவலா் குடியிருப்பு, குடிசை மாற்று வாரியம் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல, ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் ரெகுநாதபுரம், தெற்கு காட்டூா், தெற்குவாணி வீதி, படைவெட்டிவலசை, பூசாரிவலசை, ராமன்வலசை கும்பரம் இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகா், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், பிச்சாவலசை, உத்தரவை , தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம நிறுத்தப்படும்,
மேலும், மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயா் பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.